Indian Army warns China: போரைத் தொடங்கிப் பார் என சவால் விடுக்கும் இந்திய ராணுவம்

எதிர்வரும் நாட்களில் போர் போன்ற நிலைமைகளை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, திறமையான துருப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய ராணுவம் சீனாவை எச்சரித்துள்ளது...

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 16, 2020, 07:54 PM IST
  • இந்தியா அமைதியை விரும்பும் நாடு, அண்டை நாடுகளுடன் நல்லுறவு கொள்ள விரும்புகிறது.
  • இந்தியா பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்க விரும்புகிறது.
  • உலகில் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அனுபவம் இந்திய ராணுவத்திடம் உள்ளது....
Indian Army warns China: போரைத் தொடங்கிப் பார் என  சவால் விடுக்கும் இந்திய ராணுவம் title=

ஜம்மு: எதிர்வரும் நாட்களில் போர் போன்ற நிலைமைகளை உருவாக்கினால், சிறந்த பயிற்சி பெற்ற, திறமையான துருப்புக்களை எதிர்கொள்ள நேரிடும் என்று இந்திய ராணுவம் சீனாவை எச்சரித்துள்ளது. கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட முழு அளவிலான போரை நடத்த தனது படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக   இந்திய ராணுவம் சவால் விடுத்துள்ளது.

"சீனா போருக்கான நிலைமைகளை உருவாக்கினால், அவர்கள் சிறந்த பயிற்சி பெற்ற, சிறந்த முறையில் தயாரிக்கப்பட்ட, முழுமையாக ஓய்வெடுக்கப்பட்ட மற்றும் உளவியல் ரீதியாக கடினப்படுத்தப்பட்ட இந்திய துருப்புக்களை எதிர்கொள்வார்கள்" என்று இந்திய ராணுவம் (Indian Army) வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உடல் மற்றும் உளவியல் ரீதியாக போரிடும் இந்திய துருப்புக்களுடன் ஒப்பிடும்போது, சீன வீரர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்கள், கள நிலைமைகளையும் அதன் கஷ்ட நஷ்டங்களையும் அறியாதவர்கள் அல்லது அந்த நிலைக்கு நீண்டகாலமாக பயன்படுத்தப்படாதவர்கள் என்று இந்திய ராணுவம் கூறியது.

இந்தியாவிடம் தளவாடங்கள் போதுமான அளவில் இல்லை என்றும், குளிர்காலத்தில் திறம்பட போராட முடியாது என்றும் சீனாவின் உத்தியோகபூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் (Global Times) தெரிவித்திருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் இந்திய ராணுவத்தின் Northern Commandஇன் தலைமையகம் இந்த சவாலை வெளியிட்டது.

“இது அறியாமையின் சிறந்த முன்னுதாரணம் என்று கூறலாம். கிழக்கு லடாக்கில் குளிர்காலத்தில் கூட இந்திய இராணுவம் முழுமையான தயார் நிலையில் உள்ளது. முழு அளவிலான போரை நடத்தும் திறனில் உள்ளது ”என்று வடக்கு கட்டளை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

"இந்தியா அமைதியை விரும்பும் நாடு, அதன் அண்டை நாடுகளுடன் நல்ல உறவு கொள்ள விரும்புகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சினைகளை தீர்க்கவே இந்தியா எப்போதும் விரும்புகிறது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், ராணுவ நிலையிலும் இந்தியா எந்த நிலைப்பாட்டிற்கும் தயாராக உள்ளது”என்று அவர் கூறினார்.

லடாக்கில் ‘high to super-high altitude’ இருப்பதாக குறிப்பிட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர், நவம்பருக்குப் பிறகு 40 அடி வரை பனிப்பொழிவு இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.

Read Also | சீனாவின் கண்காணிப்பில் Paytm முதல் Zomato வரை பல நிறுவனங்கள் இருப்பதாக பகீர் தகவல்!

“இதனுடன் இணைந்து, வெப்பநிலை மைனஸ் 30 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை குறைவது ஒரு வழக்கமான நிகழ்வு. காற்றின் குளிர்ச்சியான காரணி துருப்புக்களின் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. பனிப்பொழிவின் காரணமாக பனி படர்ந்து சாலைகளும் மூடப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தையும் மீறி, இந்திய வீரர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும் ஒரு விஷயம் உண்டு. இந்திய வீரர்கள் குளிர்காலத்தில் போர் புரியும் அனுபவத்தை பெருமளவில்  கொண்டுள்ளனர், மேலும் குறுகிய அறிவிப்பில் செயல்பட உளவியல் ரீதியாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்”என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"லாஜிஸ்டிக் திறன் இயக்கம் என்பது, தங்குமிடம், ஆரோக்கியத்திற்கான தரமான சேவைகள், சிறப்பு ரேஷன்கள், பழுது மற்றும் மீட்பு, வெப்ப அமைப்புகள், உயர்தர ஆயுதங்கள், வெடிமருந்துகள், தரமான ஆடை மற்றும் வேறு பலவற்றுடன் தொடர்புடையது. இந்த திறன்களில் பெரும்பாலானவை முன்னரே இந்தியாவிடம் இருந்தன. இந்த ஆண்டு மே மாதம் முதல் ஆக்கிரமிப்புக்கான சீனாவின் நடவடிக்கைகளுக்குப் பிறகு எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.

சீனாவுடனான எல்லைகளை விட நிலைமைகள் மிகவும் தேவைப்படும் உலகில் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் அனுபவத்தை ராணுவம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"பாரம்பரியமாக லடாக் செல்ல இரண்டு வழிகள் இருந்தன, அதாவது Zojila (ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலை) மற்றும் Rohtang Passes (மணாலி-லே) வழியாக. சமீபத்தில் இந்தியா டார்ச்சாவிலிருந்து லே வரை மூன்றாவது சாலையை அமைத்தது. இந்த பாதை பனியால்   மூடப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு, ”என்று அவர் மேலும் கூறினார்.

ரோஹ்தாங் பாதையில் அடல் சுரங்கப்பாதையை நிறைவு செய்து தளவாட திறன்களை இந்தியா பலப்படுத்தியுள்ளது என்றும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.
இவற்றைத் தவிர இந்தியாவிடம் கூடுதலாக,   ஏராளமான விமான தளங்கள் உள்ளன, இதன் உதவியுடன் ராணுவத்தை சிறப்பாக பராமரிக்க முடியும். நவம்பர் மாதத்திற்கு பிறகு குளிர் அதிகரிக்கும் நிலையில், நவீன பனி அகற்றும் கருவிகளும் இந்த பாதைகளில் வைக்கப்பட்டுள்ளன என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

Read Also |  இந்தியாவின் எல்லையில் கேபிள்கள் பதிப்பதாக வெளியாகும் செய்திகளை மறுக்கும் China

பீரங்கிகளுக்கான சிறப்பு எரிபொருட்கள், மசகு எண்ணெய் மற்றும் கவசப் பணியாளர்கள் கேரியர்களும் அவற்றின் பராமரிப்புக்கான உதிரிபாகங்கள் உட்பட தேவையான அனைத்தும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

துருப்புக்களுக்கும், அவர்களுக்கு உதவும்  கழுதைகள், யாக் (mules and yaks) போன்ற விலங்குகளுக்கு தேவையான நீர் ஆதாரங்களுக்காக குழாய் கிணறுகள் நிறுவப்பட்டுள்ளன. வசதியான மற்றும் சூடாக இருக்கும் தங்கும் வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன”என்று அவர் கூறினார்.

மிகவும் உயரமான இடங்களில் central heating system போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறிய ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் பீரங்கிகள் மற்றும் பீரங்கி வெடிமருந்துகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வெடிமருந்துகளும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மருத்துவ முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது" என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சீனாவின் வெற்று வாய்ச்சவாடல்கள் இனி பலிக்காது என்பதை இந்திய ராணுவம் விளக்கமாக கூறி தெளிவுபடுத்திவிட்டது.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News