ஏப்ரல் 20 வரை மின்னலுடன் கூடிய இடி-மழைக்கு வாய்ப்பு; IMD தகவல்...

வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கேரளாவில் இடியுடன் கூடிய மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Last Updated : Apr 17, 2020, 12:33 PM IST
ஏப்ரல் 20 வரை மின்னலுடன் கூடிய இடி-மழைக்கு வாய்ப்பு; IMD தகவல்... title=

வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை கேரளாவில் இடியுடன் கூடிய மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் (KSDMA) எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மாநிலத்தில் லேசான மழை பெய்து வருவதால் ஏப்ரல் 20 வரை இந்த மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பில் இந்திய வானிலை ஆய்வு மையம்., "ஏப்ரல் 18 வரை கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், ஏப்ரல் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் கேரளாவில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் நிறுவனம் எச்சரித்தது.

READ | Heartbreaking! ஊரடங்கு கெடுபிடியால் தந்தையை தோளில் சுமந்து சென்ற மகன்...

கேரளாவில் இப்போது பொழியும் மழையுடன் மின்னல் இருக்கும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை. சில இடங்களில், இரவு 10 மணிக்குப் பிறகும் மின்னல் தொடரும் வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய மின்னல் ஆபத்தானது மற்றும் வீடுகளில் உள்ள உயிர்களுக்கும் மின்சார பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கும்” என்றும் KSDMA எச்சரித்துள்ளது. மேலும் மின்னலை ஒரு மாநில பேரழிவு என்று KSDMA அறிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தேவையான (கீழ்காணும்) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பேரழிவு மேலாண்மை ஆணையம் பொதுமக்களிடம் கேட்டுள்ளது.

  • வளிமண்டலம் மேகமூட்டமாக இருந்தால், குழந்தைகள் திறந்த வெளியில் விளையாடக்கூடாது
  • மழையின் போது உலர்த்துவதற்காக வெளியே போடப்பட்ட துணிகளை எடுக்க மொட்டை மாடிக்கு அல்லது திறந்தவெளிக்கு விரைந்து செல்ல வேண்டாம்
  • ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வையுங்கள்
  • மின் சாதனங்களைத் துண்டிக்கவும்
  • மின் உபகரணங்கள் மற்றும் பிற உலோகப் பொருட்களிலிருந்து விலகி இருங்கள்
  • சுவர்களைத் தொடாமல் வெற்று தரையில் உட்கார முயற்சி செய்யுங்கள்
  • வீட்டிற்கு வெளியே இருந்தால், மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம்
  • ஒரு வாகனத்திற்குள் இருந்தால், திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உலோகப் பொருட்களைத் தொடக்கூடாது
  • மின்னல் இருக்கும் போது வாட்டர் பாடியில் நுழைய வேண்டாம்

மின்னல் காரணமாக, ஒரு நபருக்கு தீக்காயங்கள் ஏற்படலாம், பார்வை மற்றும் கேட்கும் திறனை இழக்கலாம். "ஆனால் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு நபரின் உடல் மின்சார அதிர்ச்சியின் கீழ் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும், எனவே, முதலுதவி வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது" என்று KSDMA கூறுகிறது.

Trending News