அரசு ஊழியர்களின் 1 மாத சம்பளத்தை 5 மாத தவணைகளில் கழிக்க அரசு திட்டம்!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ, அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து மாத தவணைகளில் கழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Apr 22, 2020, 12:35 PM IST
அரசு ஊழியர்களின் 1 மாத சம்பளத்தை 5 மாத தவணைகளில் கழிக்க அரசு திட்டம்! title=

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ, அரசு ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தை ஐந்து மாத தவணைகளில் கழிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கழிக்கப்பட்ட ஒரு மாத சம்பளம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அனைத்து வகை அரசு ஊழியர்களின் ஆறு நாள் சம்பளத்தை ஒரு மாதத்தில் கழிக்கும் திட்டத்தை நிதித்துறை சமர்ப்பித்துள்ளது, மேலும் விலக்கு ஐந்து மாதங்களுக்கு தொடரும் எனவும் அரசு தரப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.

இதன் பின்னர், கழிக்கப்பட்ட ஒரு மாத சம்பளம் ஒரு கட்டமாக ஊழியர்களுக்கு திருப்பித் தரப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தால் இந்த முன்மொழிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றும் இதுதொடர்பான அறிவிப்பு முதல்வரால் அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, வெள்ள நெருக்கடியை எதிர்கொள்ள மாநில அரசு அறிவித்த சம்பள சவாலை உயர்நீதிமன்றத்தில் ஊழியர்கள் சங்கங்கள் எதிர்த்தன. இதனையடுத்து ஒரு பிரிவின் ஊழியர்களிடமிருந்து வரும் எதிர்ப்பைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒரு மாத சம்பளத்தை ஐந்து மாத தவணைகளில் கழித்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திருப்பிச் செலுத்தும் முறையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது, குறிப்பாக மாநிலத்தின் நிதி நிலைமை மேம்பட்ட பின்னர்.

ஓய்வூதியம் பெறுவோர் இப்பட்டியலில் இருந்து விலக்கப்படுவார்களா, அதே நேரத்தில் சுகாதார ஊழியர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்படுவார்களா என்பது தெரியவில்லை.

எதிர்பார்த்தபடி, இடது சார்பு சேவை அமைப்புகள் மாநில அரசாங்கத்தின் முடிவை வரவேற்றன, எதிர்க்கட்சி சேவை அமைப்புகள் அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Trending News