பாலியல் வன்கொடுமைக்கு பின் பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை!

12 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Jan 23, 2020, 05:10 PM IST
பாலியல் வன்கொடுமைக்கு பின் பள்ளி மாணவர் விடுதியில் தற்கொலை! title=

12 ஆம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமைக்கு பின்னர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

மகாராஷ்டிராவில் விடுதியில் தங்கியிருந்த 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்துள்ள கொடூரச் சம்பவத்தை அடுத்து 11 மாணவர்கள் மற்றும் 3 பள்ளி ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளர். சந்திரபூரில், கடந்த 18 ஆம் தேதி அன்று 12 ஆம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

தான் தங்கியிருந்த விடுதியிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த மாணவனின் மரணம் பற்றிய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துக் கொண்ட மாணவனை சக மாணவர்களும், பள்ளி நிர்வாக ஊழியர்களும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக அந்த மாணவன் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்து அதிர்ந்த பெற்றோர் குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அம்மாணவனை இந்த முடிவுக்கு தூண்டியதற்காக 11 மாணவர்களும் 14 ஊழியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Trending News