மகளிர் தினத்தில் பிரச்சாரத்தை துவங்கும் மம்தா பானர்ஜி!

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமது கட்சியின் பிரச்சாரத்தினை உலக மகளிர் தினத்தன்று தொடங்கவுள்ளார்!

Last Updated : Mar 7, 2019, 11:40 AM IST
மகளிர் தினத்தில் பிரச்சாரத்தை துவங்கும் மம்தா பானர்ஜி! title=

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தமது கட்சியின் பிரச்சாரத்தினை உலக மகளிர் தினத்தன்று தொடங்கவுள்ளார்!

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதேவேலையில் பிரதாண கட்சிகளான காங்கிரஸ், பாஜக மாநில கட்சிகளுடன் கூட்டணி உடன்படிக்கைகளை அடுத்தடுத்து கையெழுத்திட்டு வருகின்றது. 

நாடுமுழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி கண்டு ஆட்சியை பிடிக்க பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான பொதுக்கூட்டம், பிரச்சாரம் குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உலக மகளிர் தினத்தன்று (மார்ச் 8) பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தினை தொடங்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், கொல்கத்தாவின் ஸ்ரத்தானந்தா பூங்காவில் எஸ்பிளனேடு வரை பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை அம்மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி நிர்வாகி தெரிவிக்கையில்,.. 'பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும், நாங்கள் மார்ச் 8 அன்று உலக மகளிர் தினத்தில் பிரச்சாரத்தினை தொடங்க உள்ளோம். ஏற்கனவே கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2016-ஆம் ஆண்டு  நடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் இதே தேதியில் தான் பிரச்சாரம் தொடங்கப்பட்டது' என தெரிவித்தார்.

இந்த பொதுக்கூட்டத்திற்கான திரிணாமுல் காங்கிரஸ் பதாகைகளில் 'புதிய இந்தியா, ஒருங்கிணைந்த இந்தியா, மற்றும் வலிமையான இந்தியா' என்பதே முக்கிய நோக்கமாக அச்சிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News