மீண்டும் பூட்டுதல் இல்லை; Unlock 2.0-வுக்கு தயாராகுங்கள் -பிதமர் மோடி உறுதி!

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மற்றுமொரு பூட்டுதல் தொடர்பாக வெளியாகும் அனைத்து ஊகங்களையும் மறுத்ததோடு, Unlock 2.0-வுக்கு தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Last Updated : Jun 17, 2020, 09:16 PM IST
மீண்டும் பூட்டுதல் இல்லை; Unlock 2.0-வுக்கு தயாராகுங்கள் -பிதமர் மோடி உறுதி! title=

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை மற்றுமொரு பூட்டுதல் தொடர்பாக வெளியாகும் அனைத்து ஊகங்களையும் மறுத்ததோடு, Unlock 2.0-வுக்கு தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது அவர் அனைத்து மாநில முதல்வர்களையும் "வதந்திகளை எதிர்த்துப் போராட" அழைப்பு விடுத்தார், மேலும் Unlock 2.0-க்கு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தயார் படுத்திக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதுவரை இல்லாத அளவிற்கு 2174 தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்!...

பிரதமர்-முதல்வர் இடையேயான 6-வது வீடியோ மாநாட்டின் இரண்டாவது நாளில் பேசிய பிரதமர் மோடி இந்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பெருநகரங்களில், குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் சென்னையில் COVID-19 எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சமூக ஊடகங்களில் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். மேலும் நாட்டில் மீண்டும் முழு அடைப்பு அமுல்படுத்தப்படலாம் என செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இன்று முதல்வர்களுடன் பேசிய பிரதமர் இவ்வாறான ஊகங்களை மறுத்தார்.

மேலும் அவர் இதுகுறித்து தெரிவிக்கையில்., "நாம் இப்போது Unlock 2.0 கட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில், குடிமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாத்தியக்கூறுகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்தும் சிந்திக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

முகமூடியை அணிவது, சுகாதாரத்தைப் பேணுதல் அல்லது சமூக தூரத்தைக் கடைப்பிடிப்பது போன்ற அடிப்படை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்து, பொருளாதாரத்தை மேலும் திறப்பதற்கான வலுவான குறிப்பையும் வலியுறுத்தினார்.

"கொரோனாவை எவ்வளவு அதிகமாக நிறுத்த முடியுமோ அவ்வளவு அதிகமாக அரசு செயல்பட்டு வருகிறது. நமது பொருளாதாரம் திறக்கப்படும், நமது அலுவலகங்கள் திறக்கப்படும், சந்தைகள் திறக்கப்படும் போக்குவரத்து வழிமுறைகள் திறக்கப்படும், மற்றும் பலவற்றை இயல்புநிலைக்கு கொண்டுவருவோம். புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்" என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஆம்புலன்ஸ் தயாரிப்பு துறையிலும் காலடி பதித்தது மஹிந்திரா குழுமம்!...

சரியான நேரத்தில் தலையிட்டதால் இந்தியா தொற்றுநோயின் அதிவேக வளர்ச்சியில் இருந்து தப்பிக்க முடிந்தது என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவில், மிகக் குறைவான நோயாளிகளுக்கு ICU அல்லது வென்டிலேட்டர்கள் தேவை என்று அவர் வலியுறுத்தினார். எவ்வாறாயினும், முன்னதாக அதிகரித்த சோதனைக்கும், அதே சுகாதார உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் அவர் சிறப்பு முக்கியத்துவம் அளித்தார்.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா போன்ற முக்கிய மாநிலங்கள் புதன்கிழமை நடந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.

Trending News