“தாலாட்டுப்பாடி கொலை செய்தேன்” பெங்களூரு தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்!

Bangalore CEO Suchana Seth: பெங்களூருவை சேர்ந்த பெண் தாெழிலதிபர், தன் நான்கரை வயது மகனை கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Yuvashree | Last Updated : Jan 13, 2024, 01:10 PM IST
  • பெங்களூரு சி.இ.ஓ தனது மகனை கொன்றுள்ளார்.
  • இதன் முழு பின்னணியை போலீஸாரிடம் விவரித்துள்ளார்.
  • அவர் தனது மகனை தாலாட்டு பாடி கொலை செய்துள்ளார்.
“தாலாட்டுப்பாடி கொலை செய்தேன்” பெங்களூரு தொழிலதிபர் பகீர் வாக்குமூலம்! title=

இந்தியா முழுவதும், கடந்த மூன்று தினங்களாக பெரிதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சம்பவம் குறித்த அதிர்ச்சியான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. பெற்ற தாயே தனது நான்கரை வயது மகனை கொன்றது ஏன்? இந்த சம்பவத்திற்கு பின்னால் நடந்த நிகழ்வுகள் என்ன? அனைத்து விவரங்களையும் இங்கு பார்ப்போம். 

சொந்த மகனையே கொலை செய்த பெங்களூரு தொழிலதிபர்:

பெங்களூருவை சேர்ந்த 39 வயது பெண் தொழிலதிபர் சுசானா சேத். இவர், தனது நான்கரை வயது மகனை கொலை செய்து சூட் கேஸில் உடலை மறைத்து வைத்து கோவாவில் இருந்து பெங்களூருவிற்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்த வழக்கு விசாரணையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸார், இந்த விசாரணையை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கு குறித்த பகீர் கிளப்பும் வகையிலான உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

சுசானா சேத், தனது மகனுடன் கோவாவில் உள்ள 

இந்த நிலையில், இந்த கொலை வழக்கு குறித்த பகீர் கிளப்பும் தகவல்கள் ஒவ்வொரு நாள் விசாரணையில் இருந்தும் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையில், தனது மகனை எப்படி கொலை செய்தார் என்பது குறித்தும், ஏன் இந்த கொலையை செய்தார் என்பது குறித்தும் சுசானா செத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | 4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெங்களூரு தொழிலதிபர்! நடந்தது என்ன? பகீர் பின்னணி!

சுசானா சேத், கோவாவில் உள்ள காண்டோலிம் என்ற பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கடந்த ஜனவரி 6 முதல் 8ஆம் தேதி வரை தங்கியிருந்துள்ளார். அப்போது தனது நான்கரை வயது மகனை கொலை செய்து, உடலை சூட்கேசில் மறைத்து வைத்து டாக்சி மூலம் பெங்களூரு வரை கொண்டு வந்துள்ளார். இந்த வழக்கு குறித்த விசாரணையில், அவர் தனது மகனை கொலை செய்தது எப்படி என்று போலீஸாரிடம் இரண்டரை மணி நேரத்திற்கு நிகழ்த்தி காண்பித்து, இறுதி வாக்குமூலத்தை காெடுத்திருப்பதாக விசாரணையை மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .  

தாலாட்டுப்பாடி குழந்தையை கொன்ற சுசானா.. 

விசாரணையில், கொலை நடந்தது எப்படி என்று நிகழ்த்தி காண்பித்துள்ளார்  சுசானா. அப்போது தனது மகன் எங்கு, எப்படி படுத்திருந்தார் என்பதையும் தனது குழந்தையின் உடலை மறைத்து எடுத்தச்சென்ற பெட்டி எங்கு வைக்கப்பட்டிருந்தது என்பதையும் அதில் உடலை மறைத்து வைத்திருந்தது எப்படி என்பதையும் காண்பித்துள்ளார். மேலும், அவர் தனது குழந்தையை கொல்லும் போது, தாலாட்டு பாடியதாகவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.

தற்கொலை முயற்சி..? 

சுசானா தங்கியிருந்த அறையில் படிந்திருந்த ரத்தக்கரையை பார்த்த பிறகுதான், அந்த விடுதியில் உள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதை வைத்துதான் போலீஸாருக்கு அவர்கள் தகவலையும் அளித்துள்ளனர். இந்த நிலையில், சுசானாவை கொலை நடந்த இடத்திற்கு சென்று என்ன நடந்தது என முழுமையாக தெரிந்து கொள்ள, போலீஸாருடன் தடவியல் நிபுணர்கள் சென்றுள்ளனர். சுசானா, தற்கொலை செய்ய முயற்சி செய்திருக்கலாம் என்றும், இதனால் ஏற்பட்ட ரத்தக்கரையாக அந்த கரை இருக்கலாம் என்றும் தடவியல் நிபுணர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். 

குழந்தையை கொன்றது ஏன்? 

சுசானா சென்னிற்கும் கணவர் வெங்கட் ராமனுக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2019ஆம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். வெளிநாட்டில் தங்கியிருக்கும் வெங்கட் ராமன், குழந்தையை மட்டும் அவ்வப்போது வந்து பார்ப்பார் என கூறப்படுகிறது. இவர், முதற்கட்ட விசாரணையில் தனது முன்னாள் கனவரை பழிவாங்கும் நோக்கிலேயே  தனது குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டிருக்கிறார். 

முழு பின்னணி..

>குழந்தையை கொலை செய்த பின்பு சுசானா சேத், கடந்த திங்கட்கிழமை இரவு கர்நாடகாவில் இருந்து டாக்ஸியில் புறப்பட்டுள்ளார். அந்த டாக்ஸி ஓட்டுநர், 10 மணி நேர பயணத்தில் சுசானா ஒரு வார்த்தை கூட பேசவில்லை என போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். 

>தனது குழந்தை இறந்ததற்காக, இவர் எந்த இரக்க அல்லது சோக உணர்வையும் காட்டவில்லை என்று போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

>இது குறித்து சுசானா, ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அதில், தன் கணவருடன் கோர்டில் போராடுவதால் தனக்கு எந்த அளவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இந்த கடிதத்தை அவர், ஒரு டிஷ்யூ பேப்பரில், ஐலனரை உபயோகப்படுத்தி எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் மேலும் என்ன எழுதியிருந்தார் என்பதை வெளியிட போலீஸார் மறுத்துவிட்டனர். ஆனால், அந்த கடிதத்தின் மூலம் அவர் குழந்தையின் கஸ்டடி யாரிடம் இருக்க வேண்டும் என்பது குறித்த வழக்கினால் அவர் மன உளைச்சலில் இருந்தது தெரிய வந்ததாக கூறியுள்ளனர். 

>கடந்த ஜனவரி 6ஆம் தேதியன்று, தனது முன்னாள் கணவரான வெங்கட் ராமனுக்கு இவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மறு நாள் வந்து குழந்தையை சந்திக்குமாறு கூறியுள்ளார். ஆனால், பெங்களூரு வீட்டிற்கு வெங்கட் ராமன் வந்து பார்த்த போது, அங்கு யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. 

>சுசானா சென், கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் கணவர் தன்னையும் தனது கணவரையும் அடித்து துன்புருத்துவதாக விவாகரத்து ஆவணங்களில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், இதனை வெங்கட் ராமன் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார். அந்த புகாரை அடுத்து, வெங்கட் ராமன் அவரது மனைவியையோ குழந்தையையோ பார்க்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. அதற்கு பிறகு அவருக்கு குழந்தையை பார்க்க நீதிமன்றம் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. இது, சுசானாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

மேலும் படிக்க | பெங்களூர் சிஇஓ சுசனா சேத் மகனை கொன்றது ஏன்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News