தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும்- பிபின் ராவத்

காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேலும் நடைபெறும் என பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார். 

Last Updated : Jan 13, 2017, 04:23 PM IST
தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும்- பிபின் ராவத் title=

புதுடெல்லி: காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் நிலவும் சூழ்நிலையை பொறுத்து எல்லையில் மீண்டும் சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதல் மேலும் நடைபெறும் என பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பிபின் ராவத் தேவைப்படுமாயின் மீண்டும் துல்லிய தாக்குதல் முன்னெடுப்போம் என கூறிஉள்ளார். 

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் எல்லையில் உரி ராணுவ முகாமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதல் நடத்தினர். 

இதனையடுத்து இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதலில் பாகிஸ்தானின் 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இதனை பாகிஸ்தான் மறைக்க முயற்சி செய்தது, கடைசியில் எல்லையில் அத்துமீற தொடங்கியது. இந்தியா கொடுத்த பதிலடியில் அடங்கியது.

Trending News