உபி: CAAக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டம், வன்முறையாக மாறிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளளது.

Last Updated : Dec 21, 2019, 03:44 PM IST
உபி: CAAக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு title=

குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டம், வன்முறையாக மாறிய நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளளது.

புதிதாக அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்கள், குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகள் இதுவரை இந்தச் சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் கண்டுள்ளன. முன்னதாக இந்த சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் காவல்துறையினருடன் மோதல் நடத்தியதில், இரு தரப்பு மக்களும் காயமடைந்ததை அடுத்து டெல்லியில் நடந்த போராட்டம் கசப்பாக மாறியது. ஜாமியா மற்றும் சீலாம்பூர்-ஜாஃபராபாத் வன்முறைகள் மற்றும் ஜாமா மஸ்ஜித் அருகே நடந்த ஆர்ப்பாட்டங்கள் காரணமாக  வணிகர்கள் டெல்லிக்கு வருவதை நிறுத்திவிட்டனர். மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 16 காவலர்கள் உட்பட 35-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தவல்கள் தெரிவிக்கிறது.

டெல்லி செங்கோட்டை அருகே, 144 தடை உத்தரவை மீறி போராட்டக்காரர்கள் திரண்டதால் அங்கு பதற்றம் நிலவியது. மேலும் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. போராட்டங்களுக்கு போலீசார் தடை விதித்த நிலையிலும், போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், இடதுசாரி மாணவ அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் உத்தர பிரதேச மாநிலத்தில் பதோதி, காசியாபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தவகையில் உத்தர பிரதேச மாநிலத்தில் வன்முறை வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தியும், கண்ணிர் புகைக்குண்டு வீசியும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். இதில், பிஜ்னூரில் இருவரும், மீரட், சம்பல், பிரோசாபாத், கான்பூரில் தலா ஒருவர் என 6 பேர் நேற்று உயிரிழந்தனர். ஆனால், வன்முறையை கட்டுப்படுத்த துப்பாக்கிச் சூடு எதுவும் நடத்தவில்லை என உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதனால், உத்தர பிரதேசத்தில் மட்டும் குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆகியுள்ளது.

Trending News