சனிப்பெயர்ச்சி இந்த 2 ராசிகளை பாடாய் படுத்தவுள்ளது: எச்சரிக்கை தேவை

Saturn Transit: சனி பகவான் 29 ஏப்ரல் 2022 அன்று கும்ப ராசியில் பிரவேசித்தார். சனியின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 6, 2022, 06:04 PM IST
  • சனி செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்.
  • சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையின் துவக்கமாக இருக்கும்.
  • சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனி செல்வம், ஆரோக்கியம் மற்றும் கௌரவத்தை இழக்க வைக்கும்.
சனிப்பெயர்ச்சி இந்த 2 ராசிகளை பாடாய் படுத்தவுள்ளது: எச்சரிக்கை தேவை  title=

சனிப்பெயர்ச்சி 2022: சனி பகவான் 29 ஏப்ரல் 2022 அன்று கும்ப ராசியில் பிரவேசித்தார். சனியின் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

சிலருக்கு சனியின் ராசி மாற்றம் நிம்மதியையும், சந்தோஷத்தையும் அளிக்கும். சிலருக்கோ இது பல பிரச்சனைகளை உண்டுபண்ணும். கும்ப ராசியில் சனியின் பிரவேசத்தால், மீன ராசியில் ஏழரை நாட்டு சனி துவங்குகிறது. தனுசு ராசிக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கம் நிறைவடைகிறது. 

எனினும், இன்னும் இரண்டு ராசிகளுக்கு சனி-யின் ராசி மாற்றத்தால் பிரச்சனைகள் ஆரம்பிக்க உள்ளன. இந்த சோதனை நேரம் நீண்ட காலம் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 2 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 

கடகம்:
சனி பெயர்ச்சியுடன் கடக ராசிக்காரர்களின் சனி தசை ஆரம்பித்துவிட்டது. இது இரண்டரை ஆண்டுகள் நீடிக்கும். அதாவது கடக ராசிக்காரர்கள் இரண்டரை வருடங்கள் சனியால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவார்கள். 

கடக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். தொழில்-கல்வியில் சிரமங்கள் ஏற்படலாம். பண இழப்பு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். நோய்கள் உடலை தாக்கக்கூடும். ஆகையால் இந்த அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். 

மேலும் படிக்க | சிம்ம ராசிக்கு சிங்க பலத்தை தரும் நட்புகள்: இன்றைய ராசிபலன்

விருச்சிகம்:
சனிப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி தசையின் துவக்கமாக இருக்கும். எனவே, அடுத்து வரும் இரண்டரை ஆண்டுகள் இந்த ராசிக்காரர்களுக்கு கடினமாகவே இருக்கும். சனி தசை மற்றும் ஏழரை நாட்டு சனி செல்வம், ஆரோக்கியம் மற்றும் கௌரவத்தை இழக்க வைக்கும். இது தவிர, முன்னேற்றத்தில் தடைகள் மற்றும் உறவுகளில் பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவீர்கள். இந்த நேரத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். 

சனி செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார்
ஜோதிடத்தில், சனி கர்மாவின் கிரகமாக கருதப்படுகிறார். அதாவது சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை தருகிறார். ஆகவே நல்ல செயல்களை செய்து, ஜாதகத்தில் சனி சுபமான இடத்தில் உள்ளவர்களுக்கு ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் கெட்ட தாக்கம் இருக்காது.

ஆகையால், ஏழரை நாட்டு சனி மற்றும் சனி தசையின் போது, அனைவரும் தாங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆதரவற்றோர், பெண்கள், முதியவர்களை அவமதிக்கக் கூடாது. இவர்களுக்கு இயன்ற அளவு உதவி செய்ய வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகுவின் அருளால் இந்த ராசிகளுக்கு அடுத்த ஒரு வருடம் அமோகமாக இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News