7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: இன்று மாலை வரும் நல்ல செய்தி

7th Pay Commission: பிப்ரவரியில், குறியீட்டு எண்ணிக்கை 132.8 லிருந்து 132.7 ஆக குறைந்துள்ளது. வரும் மாதங்களில் குறியீட்டு எண் மாறாமல் 132.7 ஆக இருந்தாலும், அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 28, 2023, 05:25 PM IST
  • அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புகள்.
  • மார்ச் மாத ஏஐசிபிஐ எண்ணிக்கை இன்று வரும்.
  • ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் தரவு வெளியிடப்படுகிறது.
7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: இன்று மாலை வரும் நல்ல செய்தி title=

7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு: மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. இன்று மாலை ஊழியர்களுக்கு மிகவும் முக்கியமான நேரமாக இருக்கும். ஏனெனில், இன்று மாலை, தொழிலாளர் பணியகத்தால் டிஏ தரவு வெளியிடப்படும். இதன் மூலம் வரும் நாட்களில் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரப் போகிறது என்பதை அவர்கள் அறிந்து கொள்ளலாம். ஜூலை மாதத்திலும், அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால், அதன் பிறகு ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரிக்கும். 

ஜூலை 1 முதல் அகவிலைப்படி அதிகரிக்கும்

ஜூலை 1, 2023 முதல் அடுத்த அகவிலைப்படி அதிகரிப்பு அமலில் இருக்கும். அதன் பிறகு மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவை அதிகரிக்கும். ஊழியர்களுக்கு தற்போது 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

மார்ச் மாத ஏஐசிபிஐ எண்ணிக்கை இன்று வரும் 

6 மாத CPI-IW குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படியில் திருத்தம் செய்யப்படுகிறது. தரவு AICPI-IW ஆல் வழங்கப்படுகிறது. இதுவரை குறியீட்டு அடிப்படையில் அகவிலைப்படி 43.79 -ஐ எட்டியுள்ளது. மார்ச் மாதத்திற்கான எண்கள் இன்று (ஏப்ரல் 28) மாலை வெளியிடப்படும்.

அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புகள்

அரசாங்கம் ஜூலை மாதத்திலும் அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தக்கூடும் என்றும், இதைத் தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 46 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்போது, ​​ஊழியர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க | 8th Pay Commission மாஸ் அப்டேட்: விரைவில் எக்கச்சக்க ஊதிய உயர்வு, குஷியில் ஊழியர்கள்

பிப்ரவரியில் என்ன எண்ணிக்கை இருந்தது

பிப்ரவரியில், குறியீட்டு எண்ணிக்கை 132.8 லிருந்து 132.7 ஆக குறைந்துள்ளது. வரும் மாதங்களில் குறியீட்டு எண் மாறாமல் 132.7 ஆக இருந்தாலும், அகவிலைப்படியில் குறைந்தபட்சம் 3 சதவீத அதிகரிப்பு இருக்கும். 

ஒவ்வொரு மாதமும் கடைசி தேதியில் தரவு வெளியிடப்படுகிறது

ஏஐசிபிஐ-ஐடபிள்யூ (AICPI-IW) தரவு ஒவ்வொரு மாதத்தின் கடைசி தேதியில் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில் இந்த தரவு வெளியிடப்படுகிறது. இதில், பல்வேறு தொழில்துறை பகுதிகளில் இருந்து பல பொருட்களின் தரவு சேகரிக்கப்படுகிறது. ஆறு மாத ஏஐசிபிஐ தரவுகளின் அடிப்படையில் அகவிலைப்படி திருத்தம் நிர்ணயிக்கப்படுகின்றது. 

மற்றொரு நல்ல செய்தி

8வது ஊதியக் குழு பற்றிய அறிவிப்பை மத்திய அரசு விரைவில் அறிவிக்கக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன் ஊழியர்களுக்கு பெரிய பரிசை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தற்போது குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும்

தற்போது மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை உள்ளது. புதிய சம்பள கமிஷன் அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் உயரும். இதனுடன், சம்பள கமிஷன் அறிக்கையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரும் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு அரசின் பரிசு, டிஏ அரியர் முக்கிய அப்டேட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News