பழைய நாணயம், நோட்டுகளை விற்பவர்களின் கவனத்திற்கு; RBI எச்சரிக்கை

நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் இந்த செய்தியை கண்டிப்பாக படியுங்கள். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 23, 2022, 06:37 AM IST
  • ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
  • ரிசர்வ் வங்கி வெளியிட்ட வைரல் ட்வீட்
  • பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கி விற்கும் போக்கு தீவிரம்
பழைய நாணயம், நோட்டுகளை விற்பவர்களின் கவனத்திற்கு; RBI எச்சரிக்கை title=

கடந்த நாட்களில் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கி விற்கும் போக்கு தற்போது தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்கின்றனர். ஆனால் சமீபத்தில் இது குறித்து ஒரு முக்கியமான தகவலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்பனை செய்ய மத்திய வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில மோசடி நபர்களும் குழுக்களும் பயன்படுத்துகின்றன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. எனவே நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கும் அல்லது வாங்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கி அளித்த தகவலை சரிபார்க்கவும். 

ரிசர்வ் வங்கி வெளியிட்ட ட்வீட் பதிவில் கூறியதாவது
இந்த நிலையில் இது தொடர்பாக ரிசர்வ் வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து கூறியதாவது, இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் லோகோவை சில கூறுகள் தவறாகப் பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை பல்வேறு ஆன்லைன்/ஆஃப்லைன் தளங்களில் விற்பதற்காக மக்களிடம் கமிஷன் அல்லது வரி வசூலிப்பது இந்திய ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்துள்ளது.

மேலும் படிக்க | AFCAT 2 Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணி புரிவதற்கான அரிய வாய்ப்பு

அதன்படி ரிசர்வ் வங்கி இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு யாரிடமும் எந்தவொரு கட்டணத்தையும் அல்லது கமிஷனையும் கேட்காது. அதே நேரத்தில், வங்கி அத்தகைய நடவடிக்கைகளுக்கு எந்த நிறுவனத்துக்கும் அல்லது நபருக்கும் எந்தவித அங்கீகாரமும் வழங்கவில்லை என்று கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு யாரிடமும் எந்த ஒப்பந்தமும் இல்லை
இது போன்ற பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கி ஈடுபடுவதில்லை. மேலும் யாரிடமும் இது போன்ற கட்டணம் அல்லது கமிஷனையும் வங்கி கேட்காது. ரிசர்வ் வங்கி, “இந்திய ரிசர்வ் வங்கி எந்த அமைப்புக்கும், நிறுவனம் அல்லது தனி நபருக்கும் இது போன்ற பரிவர்த்தனைகளில், ரிசர்வ் வங்கி சார்பாக எந்தவொரு கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்க எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை. இது போன்ற போலி மற்றும் மோசடி சலுகைகளின் வலையில் சிக்க வேண்டாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி பொது மக்களுக்கு அறிவுறுத்துகிறது.” என்று கூறியுள்ளது.

மேலும் படிக்க | எல்பிஜி சிலிண்டருக்கு தலா ரூ.200 மானியம் வழங்கப்படும்; எப்படி பெறுவது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News