வாஸ்து டிப்ஸ், வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்க்கலாமா

பொதுவாகவே, மணி பிளான்ட்டை வளர்ப்பதால் வீட்டில் செல்வம் பெருகும். கடன் தொல்லை தீரும் என்ற நம்பிக்கை நமது மக்களின் மத்தியில் இருந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 21, 2022, 02:52 PM IST
  • ஒரு மணி பிளாண்ட்டை வைத்தால் நன்மை
  • கிழக்கு-மேற்கு திசையில் வைக்கக்கூடாது
  • விநாயகப் பெருமான் தென்கிழக்கு திசையின் அதிபதி
வாஸ்து டிப்ஸ், வீட்டில் மணி பிளான்ட் செடி வளர்க்கலாமா title=

நாம் பொதுவாக வீட்டில் அழகு மற்றும் பசுமையை மேம்படுத்த சிறிய மரங்கள் மற்றும் செடிகளை வைப்பது வழக்கம். பலர் தங்கள் வீடுகளில் மணி பிளாண்ட்டை வைக்கிறார்கள். அதன்படி இந்த செடியை எப்படி வளர்க்க வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. மணி பிளான்ட் வீட்டில் வளர்க்க விரும்புவோர் அதை சரியான திசையில் வளர்க்க வேண்டும். சில முக்கிய விஷயங்களை கவனிக்காமல் விட்டால், அன்னை லக்ஷ்மி கோபமடைந்து, வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் வருவதற்குப் பதிலாக, நிதி நெருக்கடி ஆரம்பமாகும் என சொல்லப்படுகின்றது. வாஸ்து நிபுணர்கள் மணி பிளான்ட்டை தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும் என்று  கூறுகிறார்கள். எனவே மணி பிளாண்ட் தொடர்பான சில முக்கிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம். 

வீட்டில் ஒரு மணி பிளாண்ட்டை வைத்தால், எந்தவொரு நிதி நெருக்கடியும் இருக்காது என்றும் குடும்பம் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. 

மேலும் படிக்க | Vitamin D பற்றாக்குறை கொரோனா நோயாளிகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

வாஸ்து சாஸ்திரத்தின் படி, மணி பிளாண்டை கிழக்கு-மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இப்படி செய்வதால், வீட்டில் சிக்கல் அதிகமாகிறது. மாறாக தென்கிழக்கு திசை நோக்கி தான் வளர்க்க வேண்டும். விநாயகப் பெருமான் தென்கிழக்கு திசையின் அதிபதியாகக் கருதப்படுகிறார். 

மணி பிளாண்டின் இலைகள் அல்லது கிளைகள் காய்ந்தால், அவற்றை வெட்டி பிரிக்க வேண்டும். இலைகள் மற்றும் தண்டுகளை நீங்களே வெட்டுவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு நண்பரைக் கொண்டு வெட்ட சொல்லுங்கள். யார் வீட்டில் மணி பிளாண்ட் உள்ளதோ, அந்த வீட்டின் நபரே அதன் இலைகள் மற்றும் கிளைகளை வெட்டக்கூடாது.

மணி பிளாண்டிற்கு எப்போதும் வடிகட்டிய நீரை ஊற்றவும். இந்த செடிக்கு 2-3 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் தேவைப்படுகிறது. நீர் ஊற்றும்போது இலைகளில் சிறிது தண்ணீர் தெளிக்கவும். மணி பிளாடிற்கு அதிக தண்ணீர் சேர்த்தால், அதன் இலைகளால் உறிஞ்ச முடியாது. இதன் காரணமாக அதன் இலைகள் மஞ்சள் நிறமாகி கீழே விழ ஆரம்பிக்கும். குளிர்காலத்தில் மணி பிளாண்டிற்கு உரமிடக்கூடாது. 

மணி பிளாண்டை எப்போதும், வீட்டிற்கு வெளியே வைக்காமல் வீட்டிற்குள் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் வருகிறது. செடியை வீட்டிற்குள் யாரும் நேரடியாக பார்க்க முடியாத இடத்தில் வைக்கவும். மணி பிளாண்டை வீட்டிற்கு வெளியே வைத்தால், அதன் நேர்மறையான விளைவு முடிவடைந்து, நல்ல விளைவுகள் ஏற்படுவதற்கு பதிலாக சேதத்தை ஏற்படுத்தத் தொடங்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News