POCSO: மகளையும் மச்சினியையும் பாலியல் தொந்தரவு செய்த அப்பாவுக்கு ஆயுள் தண்டனை

POCSO Court sentenced life imprisonment to father: 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 26, 2022, 08:15 AM IST
  • மகள் மற்றும் மச்சினிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ டிரைவர்
  • ஆயுள் தண்டனை விதித்த போக்சோ நீதிமன்றம்
  • பாலியல் தொந்தரவு வழக்கில் சாகும்வரை சிறை தண்டனை
POCSO: மகளையும் மச்சினியையும் பாலியல் தொந்தரவு செய்த அப்பாவுக்கு ஆயுள் தண்டனை title=

திருவண்ணாமலை: பெற்ற மகள் மற்றும் மச்சினியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்பு விதித்துள்ளது. குடும்பத்தில் இருக்கும் பெண்களிடமே இவ்வாறு முறைகேடாக நடந்து கொண்டவர், வெளியில் உள்ள பெண்களை எந்த கண்ணோட்டத்தில் பார்ப்பார், அவர்களிடம் எப்படி நடந்துக் கொள்வார் என்று நீதிபதி பார்த்தசாரதி கவலைகளை எழுப்பினார். பெற்ற மகள் மற்றும் மச்சினியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்த திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பார்த்தசாரதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை என்பது அவர் இறக்கும்வரை சிறையிலேயே இருக்க வேண்டும் என்பதை குறிப்பாக குறிப்பிட்டார். பொதுவாக ஆயுள் தண்டனை என்பது, 14 ஆண்டுகள் என்று புரிந்துக் கொள்ளப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பட்டு என்கிற வெங்கடேசன். இவர் ஆட்டோ ஓட்டுனர். தனது 12 வயது மகள் மற்றும் அதே வயதுடைய மனைவியின் தங்கையிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக வெங்கடேசனின் மனைவி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் படிக்க | ‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை !

கடந்த 2018 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், விசாரணை செய்த ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் பட்டு என்கிற வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறை தண்டனை அனுபவித்து வரும் வெங்கடேசனின் வழக்கு திருவண்ணாமலை போக்ஸோ நீதிமன்றத்தில் நேற்று (2022, ஜூலை 25) விசாரணைக்கு வந்தது.

வழக்கினை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி குற்றவாளியான பட்டு என்கிற வெங்கடேசனுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தும், ரூபாய் 3000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டார், இதனைத் தொடர்ந்து பட்டு என்கிற வெங்கடேசனை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க | நீங்களும் ஜெயிக்கனுமா ? - பிரக்ஞானந்தா சொன்ன வின்னிங்க் ட்ரிக்ஸ் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News