Rasipalan October 08: புரட்டாசி 22ம் நாள் ராசிபலன்

இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 8, 2021, 07:34 AM IST
Rasipalan October 08: புரட்டாசி 22ம் நாள் ராசிபலன் title=

புதுடெல்லி: சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.   

இன்று உங்கள் ராசிபலன்கள் எப்படி இருக்கும்? நினைத்த காரியம் கைகூடுமா? புது முயற்சிகள் பலன் தருமா? தெரிந்துக் கொள்ளுங்கள்... எது எப்படியிருந்தாலும், நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என கடவுளை சரணாகதி அடைந்தால், எந்நாளும் நன்னாளே...    

ராசிபலன் - 08-10-2021

மேஷம்: குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும். உடல் தோற்றப்பொலிவு மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பின் மூலம் லாபம் அதிகரிக்கும். அறிமுகம் உண்டாகும் நாள்.

ரிஷபம்: உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். மாற்றங்கள் பிறக்கும் நாள்.

மிதுனம்: கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய நாள்.

ALSO READ | குபேரனுக்கு வட்டி கட்டும் பணக்கார கடவுள் திருப்பதி பெருமாள்  

கடகம்: குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். திட்டங்கள் ஈடேறும் நாள்.

சிம்மம்: எதையும் சமாளிக்கும் திறமைகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். முயற்சிக்கேற்ற பலன்கள் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகரிக்கும் நாள்.

கன்னி: கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும் நாள்.

துலாம்: பலதரப்பட்ட விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் ஆரோக்கியமற்ற விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். கோபங்களை விடுத்து சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வதன் மூலம் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். லட்சியங்களை உருவாக்கும் நாள்.

விருச்சிகம்: மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். உடல் தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். சிக்கல்கள் நிறைந்த நாள்.

தனுசு: ஆடம்பரப் பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளின் மூலம் லாபம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். ஆதாயம் உண்டாகும் நாள்.

Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?

மகரம்: இலக்குகளை நோக்கியே உங்களது செயல்பாடுகள் அமைந்திருக்கும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் பயனும், ஆதாயமும் அடைவீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். அலைச்சல்களால் லாபம் ஏற்படக்கூடிய நாள்.

கும்பம்: வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வாழ்க்கைத்துணைவருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்: தந்தை வழி உறவுகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். எளிதாக முடிய வேண்டிய காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவுபெறும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். கருத்துக்கள் கூறுவதில் நிதானம் வேண்டும். சிக்கனத்துடன் செயல்பட வேண்டிய நாள்.

Also Read | இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News