இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதலே கைகூடாது..! யார் அந்த ராசியே இல்லாத ராசிக்காரர்கள்?

Astrology: சில ராசிக்காரர்களுக்கு என்ன செய்தாலும் காதல் என்ற ஒன்று வரவே வராது. அவை என்னென்ன ராசிகள் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Jun 15, 2023, 04:44 PM IST
  • சில ராசிக்காரர்களுக்கு என்ன செய்தாலும் காதலே வராது.
  • அவை என்னென்ன ராசிகர்கள் தெரியுமா?
  • இவர்கள் தங்களுக்குள் சில மாற்றங்கள் செய்தால் போதும் பலன் கிடைக்கும்.
இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதலே கைகூடாது..! யார் அந்த ராசியே இல்லாத ராசிக்காரர்கள்? title=

காதலில் சிலர் தோல்வியடையலாம், சிலர் மகா வெற்றி காணலாம். ஆனால், ஒரு சில ராசிக்காரர்களுக்கு காதலின் வாடை கூட அண்டாமல் போய்விடும். அவர்கள் யார் யார் என தெரியுமா?

“காதல் ஒரு கண்கட்டு வித்தை..அது இல்லையென்றால் மனிதன் வாழ்ந்து பயனே இல்லை..” என்பதெல்லாம் பழைய கதை. “சிங்கிள் டா...கெத்துடா..” என்பதுதான் புதுக்கதை. இப்படி சிங்கிள் சிங்கிள் என சொல்லிக்கொள்வோருக்கும் ஆழ் மனதில்..எங்காவது ஒரு மூளையில்..“நமக்கும் காதல் எல்லாம் அமையாதா..”என்ற ஏக்கம் மனதிற்குள் இருந்துகொண்டுதான் இருக்கும். ஆனால், சில ராசிக்காரர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் காதல் அவ்வளவு எளிதில் அமையாதாம். அது எந்தெந்த ராசி தெரியுமா?

மேலும் படிக்க | 7th Pay Commission:அடி தூள்... ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி.. அறிவிப்பு விரைவில்!!

மேஷம்:

மேஷ ராசி உடையோர், தன்னம்பிக்கை மற்றும் தைரியத்திற்கு பெயர் போனவர்கள். துருதுருவென்ற குணாதிசயம் பெற்றவர்கள். இவர்களது இந்த துடுக்கு தனத்தினாலேயே, அவசர அவசரமாக போய், காதல் வலையில் சிக்கிவிடுவர். காதல் என்றால் கமிட்மண்ட் மற்றும் கண்டிஷன் ஆகியவையும் கூடவே சேர்ந்துவரும். இதை சமாளிக்க முடியாமல் தவிக்கும் அப்பாவி ராசிக்காரர்கள் இவர்கள். இதனாலேயே கைக்கொடுக்கும் என்று நினைத்த இவர்களது காதல் கடைசியில் கவிழ்த்து விட்டுவிடும். இறுதியில் நொறுங்கிப்போன இதயம்தான் மிச்சம். 

ரிஷபம்:

நிதர்சனவாதியாககும் நம்பிக்கைக்கு பெயர் போனவர்களாகவும் விளங்குபவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இவர்கள், நிதானமாக யோசிக்கும் திறனிற்கும் பெயர் போனவர்கள். இதனுடன் சேர்ந்து இவர்களுக்கு பிடிவாதமும் பற்றிக்கொள்ளும். இதனால், “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள்தான்..”என அடித்து பேசுவார்கள். இவர்கள் தங்களின் உணர்வுகளை வெளிக்கொண்டுவருவதிலும் தயக்கம் காண்பிப்பர். இதனால், தங்கள் பார்ட்னருடனான நெருக்கமும் இவர்களுக்கு கூச்சத்தை உண்டு பண்ணும். பெரும்பாலும் இந்த ராசிக்காரர்களுக்கு காதல் கைகூடாததற்கு காரணம், இதுவாகத்தான் இருக்கும். 

மிதுனம்:

இருப்பதிலேயே காதல் விஷயத்தில் அதிர்ஷ்டமே இல்லாதவர்கள் இவர்கள்தான். புத்திசாலித்தனம், சட்டென அனைத்தையும் புரிந்து கொள்ளும் தன்மை என பல சிறப்பம்சங்கள் இந்த ராசிக்காரர்களுக்குள் இருக்கும். ஆனால், இவர்களுக்கு கமிட்மெண்ட் என்றால் பயம். ஏனென்றால் இவர்களால் யாரையும் சட்டென நம்ப முடியாது. இதனால் இவர்களுக்கு காதலும் அமையாது. எனவே தங்களின் மற்றவரிடம் பழகி எப்படி அன்பை வளர்க்க வேண்டும் என்பதை மிதுன ராசிக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும், 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இயற்கையகவே காதல் என்பது கைகூடாத ஒன்றாக இருக்கும். ஆனால், இருக்கும் ராசிகளிலேயே இந்த ராசியை உடையோர்தான் மிகவும் மென்மையான இதயத்தை கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்கு எமோஷன்சும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். தங்கள் பார்னர்கள் இடத்திலும் இதே போன்றே இருப்பர். இதனால், இவர்களுக்கு காதல் தோல்வி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதைத்தவிர்க்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வது தனித்துவதை மேம்படுத்தி கொள்வதும் கடக ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்களுள் ஒன்று. 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள், மற்றவர்களை எளிதில் ஈர்க்கும் சக்தி உடையவர்கள். ஆனால் என்ன, இவர்களின் காதல் வாழ்க்கைதான் நொந்து போகும் அளவிற்கு இருக்கும். கற்பனை திறன், பிறரை வசீகரிக்கும் திறன் என இவர்களிடம் என்னிலடங்கா நல்ல விஷயங்கள் இருக்கும், இருந்தாலும் தன்னைப்பற்றி மட்டுமே இவர்கள் அதிக அளவு யோசிப்பர். இதனால், காதல் என்பது இவர்களுடன் காதலில் விழுந்தவர்களுக்கு கசப்பாகவே தோன்றும். ரிலேஷன்ஷிப்பில் உள்ள சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் உங்கள் பார்ட்னருக்காகவும் நேரம் ஒதுக்குங்கள். அவரைப்பற்றியும் சிந்தியுங்கள்.

கன்னி:

“கன்னி ராசி உள்ளவன் டா..காதல் கலையில் வல்லவன் டா..”என்பதெல்லாம் வெறும் சினிமா பாட்டு. இவர்கள், மற்றவர்களை ஆராய்வதில் படு கெட்டிக்காரர்கள். இவர்களது புத்திசாலித்தனம், ஒவ்வொரு விஷயத்தையும் உண்ணிப்பாக ஆராயும் திறன் என அனைத்தும் பிறரை ஈர்க்கும் தன்மை உடையவை. இவர்களது காதல் மொழியே வித்தியாசமானது. எவ்வளவு வித்தியாசமானது என கேட்டால், காதலை வெளிப்படுத்தாதைத்தான் இவர்கள் காதல் மொழி என்பார்கள். இவர்கள் உணர்வு ரீதியாக ஒருவருடன் எளிதாக அட்டாச் ஆக மாட்டார்கள். இதனால், காதலும் இவர்களுடன் அட்டாச் ஆகாது. எனவே, இவற்றை தவிர்க்க கண்டிப்பாக உணர்வுகளை வெளியில் கூறுவது நல்லது. 

மேலும் படிக்க | தூக்கமின்மை பிரச்சனையா? இந்த ஈசி வழிமுறைகளை கடைபிடியுங்கள்…கை மேல் பலன் கிடைக்கும்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News