இதுதான் என்னை காப்பாற்றியது; காணாமல் 90s நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட்

சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போனதன் காரணம் குறித்து நடிகை சுகன்யா கூறிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 12, 2022, 11:49 AM IST
  • முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா
  • நடிகை சுகன்யாவின் பேட்டி வீடியோ வைரல்
இதுதான் என்னை காப்பாற்றியது; காணாமல் 90s நடிகையின் ஓபன் ஸ்டேட்மெண்ட் title=

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. இவர் சென்னையை சேர்ந்தவர். தமிழ் சினிமாவில் 1991 ஆம் ஆண்டு புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சின்னகவுண்டர், கோட்டைவாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு, ஞானப்பழம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

நடிகை சுகன்யா தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி உள்ளார். இவர் திரைக்கு வருவதற்கு முன்பு பொதிகை தொலைகாட்சியில் பெப்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்ககி வந்தார். அதன் பிறகு இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டார். மேலும் இவர் மொத்தம் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார்.

மேலும் படிக்க | சொத்து பிரச்சனையால் தத்தளித்த சிவாஜி குடும்பம்; அந்த திருமணம் தான் காரணமா?

கடந்த 2002 ஆகும் ஆண்டு நடிகை சுகன்யா அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டப்படி இருவரும் மணமுறிவுப் பெற்றனர். தற்போது சுகன்யா தன் மகளுடன் இருக்கிறார். சுகன்யா ஒரு பரத நாட்டிய கலைஞரும் கூட சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சுகன்யா லண்டன் சென்று அங்கு பாரத சுகன்யா பள்ளியை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுகன்யாவின் காணொளி வைரலாகி வருகின்றது, அதில் அவர் திடீரென்று ஏன் சினிமாவில் இருந்து காணாமல் போனார் என்பதற்கான காரணம் குறித்து பேசி இருந்தார். அப்போது அதில் எனக்கு கானாகீனா என்கிற மலையாள திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்து. ஆனால் இந்த விருது பற்றி யாரும் பேசவும் இல்லை, அதன் பின் என்னை யாரும் நடிக்கவும் அழைக்கவில்லை. அப்போது இருந்த நிலையில் எனக்கு பரதம் தான் காப்பாற்றியது என்று கூறினார்.

அதே பேட்டியில அவர் ஏன் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், வாழ்க்கையில கல்யாணத்தை விட செய்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளது, கல்யாணத்தை என்பது ஒரு சின்ன சாப்டர். அதை விட உருப்படியான நிறைய விஷயங்களை நான் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறி இருந்தார். தற்போது இந்த பேட்டி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News