வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்!

'திருச்சிற்றம்பலம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 6, 2022, 07:08 AM IST
  • வடசென்னை படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
  • இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
  • விரைவில் இப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை-2 படம் எப்போது? உறுதிப்படுத்திய இயக்குனர் வெற்றிமாறன்! title=

வெற்றி இயக்குனராக கருதப்படும் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் பல விருதுகளையும், பாராட்டுக்களையும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பெற்றிருந்தது.  வெற்றிமாறன் - தனுஷ் காம்போவில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வாடா சென்னை மற்றும் அசுரன் நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் இவர்கள் தயாரித்த காக்கா முட்டை மற்றும் விசாரணை போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இதில் கடந்த 2018ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேங்ஸ்டர் கதையம்சத்தில் வெளியான 'வட சென்னை' படம் நன்கு வெற்றிபெற்றது.  இந்த படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, ராதா ரவி, சென்ட்ராயன் போன்ற பலர் நடித்திருந்தனர்.  

இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியினை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து வந்தனர்.  வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்த சில செய்திகளும் அவ்வப்போது இணையங்களில் உலா வந்தது.  தற்போது இப்படம் குறித்த அப்டேட்டை இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.  அதில் பங்கேற்றுக்கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் மேடைக்கு வரும்பொழுது அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அனைவரும் 'வடசென்னை-2' படம் பற்றி கூச்சலிட தொடங்கினர்.

மேலும் படிக்க | புஷ்பா 2: கெட்டப்பை வெளியிட்டு ஆழம் பார்க்கும் அல்லு அர்ஜூன்

அப்போது பேசிய இயக்குனர் தான் இப்போது விஜய் சேதுபதி மற்றும் சூரியை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கிக்கொண்டிருப்பதாகவும், அந்த படம் முடிந்ததும் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாகவும் கூறினார்.  மேலும் இந்த இரண்டு படங்களின் பணிகளும் முளுமையாக நிறைவடைந்த பிறகு தனுஷை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறியுள்ளார்.  முன்பு வடசென்னை படத்தில் வரும் ராஜன் கதாபாத்திரத்தை வைத்து வெப் சீரியஸ் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க | ரோலக்ஸ் - டில்லி நேருக்கு நேர் சந்திக்க போவது எப்போது? சூர்யா கொடுத்த மாஸ் அப்டேட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News