தேவியை அழிக்க மந்திரவாதிவாதியால் முடியுமா? ஞாயிற்றுகிழமையன்று மாரி ஸ்பெஷல் எபிசோட்

Zee Tamil Maari Serial Special Episode Oct 15: தேவியின் ஆத்மாவை அழிக்க துணிந்த தாரா.. சுயநினைவை இழக்கும் சூர்யா - மாரி சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட் 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 14, 2023, 01:23 PM IST
  • தேவியின் ஆத்மாவை அழிக்க துணிந்த தாரா
  • சுயநினைவை இழக்கும் சூர்யா
  • மாரி சண்டே ஸ்பெஷல் எபிசோட் அப்டேட்
தேவியை அழிக்க மந்திரவாதிவாதியால் முடியுமா? ஞாயிற்றுகிழமையன்று மாரி ஸ்பெஷல் எபிசோட் title=

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மாரி. இந்த சீரியல் நேற்றைய எபிசோடில் தாரா தேவியை அழிக்க மந்திரவாதி ஒருவரை சந்திக்க முடிவு எடுக்கும் நிலையில் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள சிறப்பு எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம். 

அதாவது தாரா ஆத்மாக்களை அழிக்கும் கொடூரமான மாந்திரவாதியை சென்று சந்தித்து தேவியின் ஆத்மாவை அழிக்க வேண்டும் என சொல்ல அவர் அதற்கு அந்த ஆத்மா உயிரோடு இருக்கும்போது உடுத்திய புடவை மற்றும் அவளது வயிற்றில் பிறந்த மகனின் ஒரு சொட்டு ரத்தம் தேவை என சொல்கிறார்.

maari serial

வீட்டுக்கு வந்து தாரா சூர்யாவை தனியாக அழைத்து தேவி அக்கா மாரியோட வயித்துல குழந்தையா பிறக்க போறதா சொன்னாங்க அது நல்லபடியா நடக்கணும்னு ஒரு பூஜை பண்ணனும்,  மாரி கிட்ட உண்மைய சொல்லாம நீ என்கூட வா என்று சொல்ல சூர்யாவும் பொய் சொல்லி விட்டு மறுநாள் தாராவுடன் கிளம்பி செல்கிறான். 

மாந்திரீகவாதி சூர்யாவை சுயநினைவு இல்லாமல் உட்கார வைத்து பூஜையை தொடங்க இங்கே மாரிக்கு ஏதோ தப்பாக நடக்கப்போகிறது என்ற முன்னறிவிப்பு வந்து தேவியை காப்பாற்ற சித்தரை ஓடுகிறாள்.

மேலும் படிக்க | உண்மையை உடைத்த டிரைவர்..உச்சகட்ட டென்ஷனில் தாரா! மாரி தொடரில் நடக்கப்போவது என்ன..? 

சித்தர் ஒரு தீப்பந்தத்தை கொடுத்து இதை கையில் வைத்துக் கொண்டு 13 கிலோமீட்டர் வரை ஓடு, இந்த தீ பந்தம் எங்கே அமைகிறது அங்கு தான் தேவியின் ஆத்மா இருக்கிறது என்று சொல்லி அனுப்புகிறார். 

ஒரு பக்கம் சூர்யாவை வைத்து பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்க மறுபக்கம் மாரி தேவியை தேடி ஓடி வர அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் மாரி சண்டே ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எனவே மாரி சீரியலின் சண்டே ஸ்பெஷல் எபிசோடை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு காணத் தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: மகாவுக்கு செக் வைத்த சீதா.. மீரா கல்யாணத்தில் திடீர் திருப்பம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News