அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன?

Kadaisi Vivasayi Actress Death: 2021ஆம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருந்த ஒரு நடிகை கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Feb 4, 2024, 06:11 PM IST
  • கடைசி விவசாயி பட நடிகை கொலை
  • பெற்ற மகனே கொன்ற கொடூரம்
  • நடந்தது என்ன?
அதிர்ச்சி..! ‘கடைசி விவசாயி’ பட நடிகை கொலை! நடந்தது என்ன? title=

விஜய் சேதுபதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம், கடைசி விவசாயி. இப்படம், கடந்த 2021ஆம் ஆண்டு வெளியானது. இதில் யோகி பாபு, ரவி பிரகாஷ், காளி முத்து, ரேச்சல் ரிபெக்கா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேசிய விருது வாங்கி, இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இந்த படம், தமிழகத்தின் பெருமையை பெரிய திரையில் பரைசாற்றிய ஒரு படமாக இருந்தது. 

கடைசி விவசாயி படத்தில் மாயாண்டி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக நடிகர் நல்லாண்டி தேசிய விருது பெற்றார். இப்படத்தில் இவருக்கு தங்கையாகவும், விஜய் சேதுபதிக்கு அத்தையாகவும் காசம்மாள் என்ற வயது முதிர்ந்த நடிகை நடித்திருப்பார். மதுரை, உசிலம்பட்டியை சேர்ந்த காசம்மாலின் கணவரின் பெயர், ஆனையூர் பால்சாமி.

கூலி தொழிலாளி..

விவசாய கூலி தொழில் செய்து வந்த காசம்மால், கடைசி விவசாயி படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்திருந்தார். இவருக்கு நாமகோடி மற்றும் தனிக்கொடி என இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

kadaisi vivasayi

கட்டையால் அடித்துக்கொலை:

காசம்மாளின் மூத்த மகன் நாமகோடி, மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 15 ஆண்டுகளாக தனியாக தனது தாயுடன் வசித்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் எப்போதும் மது போதையில் இருந்துள்ளார். இதையடுத்து, அடிக்கடி குடிக்க பணம் கேட்டு தனது தாயிடம் இவர் சண்டை போட்டதாகவும் சொல்லப்படுகிறது. காசம்மாள் அப்படி பணம் கொடுக்கவில்லை என்றால் அவருடன் கடும் தகறாரிலும் ஈடுபட்டு வந்துள்ளார். 

மேலும் படிக்க | Indraja Shankar: ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த விழா! வைரலாகும் புகைப்படங்கள்..

இன்று (பிப்ரவரி 4) அதிகாலை 3 மணி அளவில் தூங்கிக்கொண்டிருந்த தனது தாய் காசம்மாளை எழுப்பி வழக்கம் போல குடிக்க பணம் கேட்டு நாமகோடி சண்டையிட்டுள்ளார். காசம்மாள் பணம் தரமுடியாது என கூறியிருக்கிறார். இதனால் கடும் கோபமடைந்த நாமகோடி அவரை கட்டையால் தாக்கியுள்ளார்.

உயிரிழப்பு:

மகன் இப்படி கட்டையாள் தாக்கியதை அடுத்து, காசம்மாள் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து காசம்மாள் அலறும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கதினர் ஓடி வந்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காசம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதால், போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாயையே கட்டையால் அடித்துக்கொன்ற நாமகோடியை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Poonam Pandey: இறந்ததாக நாடகமாடிய பூனம் பாண்டே! 5 ஆண்டு சிறை தண்டனை கன்ஃபார்ம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News