துர்காவிற்கு திருமணம் நடந்ததா? மெஸ்ஸின் நிலை என்ன? பல ட்விஸ்டுகளுடன் மீனாட்சி பொண்ணுங்க..!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jun 8, 2023, 12:52 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல தொடர் மீனாட்சி பொண்ணுங்க.
  • மெஸ் கையை விட்டு போகிறது.
  • துர்காவிற்கு திருமணம் நடந்ததா?
துர்காவிற்கு திருமணம் நடந்ததா? மெஸ்ஸின் நிலை என்ன? பல ட்விஸ்டுகளுடன் மீனாட்சி பொண்ணுங்க..! title=

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக வலம் வருவது, மீனாட்சி பொண்ணுங்க தொடர்தான். இந்த தொடருக்கு, மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. பெண்கள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் சம்பவங்களும்தான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

முந்தைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் நேற்றைய எபிசோடில் சக்தி வெற்றியிடம் நாளை பஞ்சாயத்து என்று சொல்லி பேச அதை பற்றி வெற்றி கவனமாக கேட்டு கொள்கிறான். ஆனாலும் என்னால் உதவ முடியாது என்று சாதாரணமாக சொல்லி விட சக்தி காேபமாகி வெற்றியை திட்டுகிறாள். 

Meenakshi Ponnunga

பின்னர், புஷ்பா துர்காவிடம் “பஞ்சாயத்தில் உன் கழுத்தில் சங்கிலி தாலி கட்ட வேண்டும், இல்லையென்றால் யமுனாவின் கழுத்தில் இருக்கும் தாலி இறங்கி விடும் என்று சொல்லி மிரட்டுகிறாள். அதன் தொடர்ச்சியாக புஷ்பா கோகிலாவிடம் தனது திட்டத்தை சொல்ல கோகிலாவும் இதற்கு ஒத்துக் கொள்கிறாள்” என்கிறாள். மறுநாள் அனைவரும் பஞ்சாயத்துக்கு கிளம்பி போகிறார்கள்.

மேலும் படிக்க | திருப்பதி கோயிலில் பிரபல நடிகைக்கு முத்தம் கொடுத்த ‘ஆதிபுருஷ்’ இயக்குநர்..வைரல் வீடியோ!

சக்தி பஞ்சாயத்துக்கு வரக்கூடாது என்பதால் அவள் இருக்கும் அறையை பூஜா பூட்டி விடுகிறாள். பிறகு பஞ்சாயத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை சொல்லுகிறாள் சக்தி அதிர்ச்சி அடைகிறாள். பஞ்சாயத்தில் சக்தி வரவில்லை என்று என்று சாந்தா சொல்ல அவள் வரும் வரை நாங்கள் காத்திருக்க முடியாது, சீக்கிரம் பஞ்சாயத்தை ஆரம்பியுங்கள் என்று கோகிலா உட்பட அனைவரும் சொல்ல ரங்கநாயகி யமுனா, கார்த்திக் திருமணம் செல்லாது என்றும் தாலியை கழற்றி பாலில் போடும்படியும் அதிர்ச்சி தீர்ப்பை கொடுக்கிறாள். இப்படி விருவிருப்பிற்கு பஞ்சமே இல்லாம் போய்க்கொண்டிருக்கும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய அப்டேட்ட என்ன தெரியுமா? 

இன்றைய எபிசோட்:

மீனாட்சி பொண்ணுங்க தொடரின் இன்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் யமுனா தாலியை கழற்றி பாலில் போட வேண்டும் என்று தீர்ப்பு தருகிறார்கள். புஷ்பாவும் இதே பஞ்சாயத்தில் எனக்கும் ஒரு தீர்ப்பு சொல்லி விடுங்கள் மீனாட்சி வரவில்லை மீனாட்சி அஸ்தி தான் வந்தது மூன்று பெண்களையும் மீனாட்சி மெஸ்சை விட்டு வெளியேறச் சொல்லுங்கள் என்று கூற, மீனாட்சியில்லாததால் வாங்கிய கடனுக்கு மூன்று பெண்களும் மெஸ்சை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பஞ்சாயத்தில் சொல்கிறார்கள். 

Meenakshi Ponnunga

வேறு வழி இல்லாமல் யமுனா துர்கா அழுது கொண்டே இருக்க அப்போது புஷ்பா இந்த பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்றால் என் தம்பி சங்கிலியை துர்கா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறாள். யமுனா சாந்தா என யாரும் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இங்கே பூஜாவால் ரூமில் அடைக்கப்பட்டிருந்த சக்தி ரூமை திறந்து கொண்டு வெளியேறி பஞ்சாயத்து நடக்கும் இடத்துக்கு ஓடி வருகிறாள். சக்தி வருவதற்குள் புஷ்பா துர்காவை இறுதியாக கேட்க, மீனாட்சி மெஸ்சை காப்பாற்றவும் யமுனாவின் தாலியை காப்பாற்றவும் சங்கிலியை கல்யாணம் செய்து கொள்ள ஒப்புக்கொள்கிறாள். 

காணத்தவறாதீர்கள்..

பூட்டிய அறையில் இருந்த சக்தி, ஒரு வழியாக தப்பித்து  வேகமாக பஞ்சாயத்து நடக்கும் இடத்தை நோக்கி ஓடி வருகிறாள். அவளது ரியாக்ஷன் என்ன? இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Megha Akash: தனுஷ் பட நடிகைக்கு விரைவில் திருமணம்..இவர்தான் மாப்பிள்ளையா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News