உயிருடன் வந்த ரோஹித்..பூஜாவுக்கு சிறை தண்டனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. 

Written by - Yuvashree | Last Updated : Sep 11, 2023, 01:08 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர், மீனாட்சி பொண்ணுங்க.
  • இத்தொடர் பல்வேறு விதமான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இதன் இன்றைய அப்டேட் என்ன..? இங்கே தெரிந்து கொள்வோம்!
உயிருடன் வந்த ரோஹித்..பூஜாவுக்கு சிறை தண்டனை - மீனாட்சி பொண்ணுங்க அப்டேட்!  title=

தமிழ் தொலைக்காட்சிகளின் பிரபலமான தொடர்களுள் மிகவும் பிரபலமான ஒன்றாக விளங்குவது, மீனாட்சி பொண்ணுங்க. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரை கவர்ந்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் சின்னத்திரை பிரபலங்களான மோக்‌ஷிதா பாய், ஸ்ரீரஞ்சினி ஆகியோர் நடித்துள்ளனர். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

இதுவரை நடந்தது என்ன..?

மீனாட்சி பொண்ணுங்க தொடர் கடந்த சில எபிசோடுகளாக பல விருவிருப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் வரும் முக்கிய கதாப்பாத்திரமான ரோஹித் விபத்தில் சிக்கி உயிரிழந்து விட்டது போன்ற கதை முன்னர் காண்பிக்கப்பட்டிருந்தது. நேற்றைய எபிசோட்டில் பூஜாவுக்கு 15 நாள் போலீஸ் காவலில் இருக்க உத்தரவிடப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் மீனாட்சி வீட்டில் ரோஹித் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. இதையடுத்து நடக்கவிருப்பது என்ன.? இங்கே காண்போம். 

மேலும் படிக்க | ‘தலைவர் 171’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இன்றைய எபிசோட் அப்டேட்!

தன்னுடைய மனைவியே தன்னை கொலை செய்ய முயற்சி செய்த விஷயத்தை சொல்லி சொல்லி அவன் கலங்கி அழ மீனாட்சி அவனுக்கு ஆறுதல் கூறுகிறாள்.  அதன் பிறகு துர்கா வெளியே வர ரோஹித்தின் அவளை தொடர்ந்து வெளியே வந்து நீங்க விளையாட்டு வீராங்கனையா என கேட்க ஆமாம் கோகோ விளையாடுவேன் என்று சொல்ல நானும் விளையாட்டு வீரன் தான் என்று சொல்லி துர்காவுக்கு பயிற்சி கொடுக்கிறான். 

Meenakshi Ponnunga

பிறகு துர்கா இனி எனக்கு நீங்கதான் ட்ரைனர் நீங்கதான் பயிற்சி கொடுக்கணும் என்று சொல்ல இந்த சமயம் பார்த்து சங்கிலி அங்கு வர ரோகித் வீட்டுக்குள் வந்து ஒளிந்து கொள்கிறான். ரோஹித் இருந்த மாதிரி இருந்துச்சு என சங்கிலி வீட்டிற்குள் வந்து அவனைத் தேடுகிறான். 

காணத்தவறாதீர்கள்..!

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொடரை தினமும் இரவு 9:30 மணிக்கு காணத்தவறாதீர்கள். 

மேலும் படிக்க | ‘மறக்குமா நெஞ்சம்’ விவகாரம்: டிக்கெட் பணம் திருப்பி தரப்படுமா..? ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News