வீடியோ ஆதாரத்தை காட்டிய சக்தி..விடுதலையான வெற்றி..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..!

Meenakshi Ponnunga: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. பரபரப்பான திருபங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், இன்று நடக்கவிருப்பது என்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 30, 2023, 12:52 PM IST
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
  • வெற்றி கைதாகி நீதிமன்றத்தின் முன் நிறுத்த படுகிறான்.
  • சக்தி ஆதாரத்தோடு அவனை காப்பாற்ற வருகிறாள்.
வீடியோ ஆதாரத்தை காட்டிய சக்தி..விடுதலையான வெற்றி..மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்..! title=

தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமான சீரியல்களுள் ஒன்றாக விளங்கும் மீனாட்சி பொண்ணுங்க தொடருக்கு பலத்த வரவேற்பு உள்ளது. மக்களின் மனங்களில் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. மங்கைகள் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்றி நடக்கும் கதைதான் இந்த தொடரின் மையக்கரு. தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் நீங்கா இடத்தை பிடித்துள்ள மீனாட்சி பொண்ணுங்க சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன தெரியுமா? தொடர்ந்து படியுங்கள். 

நேற்றைய எபிசோடில் நடந்த சம்பவங்கள்..

பூஜா அடியாட்களிடம் கோர்ட்டுக்கு வரும் அசோக்கை மறித்து அவனைக் கடத்த சொல்கிறாள்‌. அதே போல் அடியாட்கள் அசோக்கை கடத்தி வைக்கிறார்கள்.  அதன் பிறகு கோர்ட் ஆரம்பித்து ஜட்ஜ் வந்துவிட டென்ஷனான ரங்கநாயகி வெளியே வந்து சக்தியிடம் இன்னும் ஏன் தாமதம் எனக் கேட்கிறாள்.  உடனே பூஜா ரங்க நாயகியிடம் இவள் அசோக் உடன் சேர்ந்து திட்டமிட்டு வெற்றியை உள்ளே வைத்திருக்கிறாள் என்று சொல்ல ரங்கநாயகி இன்னும் கொஞ்ச நேரத்தில் வெற்றி வெளியே வந்தாக வேண்டும் என எச்சரிக்கிறாள். அசோக் வராததால் சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் யோசிக்கிறாள். அடுத்து நடந்தது என்ன? வெற்றிக்கு விடுதலை கிடைத்ததா? போன்ற பல கேள்விகளுக்கு இன்றைய எபிசோடில் விடை இருக்கிறது. 

Meenakshi Ponnunga

மேலும் படிக்க | IPL Final: சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி..மகிழ்ச்சியில் மூழ்கிய பிரபலங்கள்..!

இன்று நடக்கவிருக்கும் சம்பவங்கள்..

மீனாட்சி பொண்ணுங சீரியலின் இன்றைய எபிசோடில் சக்தி அசோக்கிற்கு போன் செய்ய அவன் ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதாக சொல்ல அதற்குள்  ரவுடிகள் போனை வாங்கி கட் செய்து விடுகிறார்கள். பிறகு சக்தி என்ன செய்வது என்று தெரியாமல் கோர்ட்டுக்குள் செல்ல வெற்றி, திடியன், கிரியை அழைத்து கூண்டில் ஏற்றுகிறார்கள். ஷார்ட்ஸ் உடன் கோர்ட்டுக்கு வந்த வெற்றியை ஜட்ஜ் திட்ட வெற்றி இன்ஸ்பெக்டர் டிரஸ் செய்ய நேரம் கொடுக்கவில்லை என்று போட்டுக் கொடுக்கிறான். பிறகு ஜட்ஜ் வெற்றியிடம் உனக்கு வக்கீல் இருக்கிறாரா என கேட்க அதற்குள் சக்தி வந்து நான் ஏற்பாடு செய்த வக்கீல் வர முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது என்று சொல்ல அப்படியானால் 15 நாள் ரிமாண்ட் என தீர்ப்பு சொல்ல ஷக்தி ஜட்ஜின் முன்னால் நான்தான் அந்த கம்பளைண்ட் கொடுத்தேன், அதை வாபஸ் வாங்கி விட்டேன். 

ஆனால் இந்த இன்ஸ்பெக்டர் முன் விரோதம் காரணமாக வேண்டும் என்றே வெற்றியை கைது செய்து விட்டார் என்று ஆதாரங்களை காட்ட ஜட்ஜ் தைரியமாக கோர்ட்டில் பேசிய சக்தியை பாராட்டி வெற்றியை விடுதலை செய்கிறார். கோர்ட் வாசலில் ரங்கநாயகி ஏன் இதை நீ போலீஸ் ஸ்டேஷனில் சொல்லிருக்கலாமே என்று சக்தியிடம் கேட்க போலீஸ் ஸ்டேஷனில் சொல்லியிருந்தால் மீண்டும் வேறு ஏதாவது சொல்லி வெற்றியை கைது செய்து இருப்பார்கள். இப்போது அந்த இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து விட்டார்கள் என்று கூறுகிறாள். 

Meenakshi Ponnunga

வெற்றியும் இதை நீ ஏன் முன்னாடியே செய்யவில்லை என்று கேட்க நீ இப்போதுதான் காலில் விழுந்தாய் அதனால் உன்னை காப்பாற்றினேன் என்று சொல்ல, நான் காலில் விழவில்லை என்று வெற்றி சொல்ல,  காலில் விழுந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் போய் கொண்டு இருக்கிறது என்று கூறி வீடியோவை காட்ட வெற்றி அதிர்ச்சியாகிறான். பிறகு சக்தி வெற்றிக்கு அவள் கொண்டு வந்த டிரஸ்சை கொடுக்க  நான் மானஸ்தன் என்று சொல்லி அதை வாங்கி கிழித்து போடுகிறான்.

காணத்தவறாதீர்கள்..

இப்படி காமெடியாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9:30 மணிக்கு காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | Maamannan: மாமன்னன் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு..எங்கு எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News