சந்தியா ராகம்: சபையில் வைத்து மாயாவை அவமானப்படுத்திய பார்வதி‌‌.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்

Sandhya Raagam Serial Today march 07 Episode Update: சபையில் வைத்து மாயாவை அவமானப்படுத்திய பார்வதி‌‌.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 12, 2024, 01:09 PM IST
  • இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • இதனை Zee5 தளத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
  • வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிறது.
சந்தியா ராகம்: சபையில் வைத்து மாயாவை அவமானப்படுத்திய பார்வதி‌‌.. கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட் title=

Sandhya Raagam Serial Today's Episode: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம் (Sandhya Raagam). இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சடங்கு நிகழ்ச்சியில் ஷாருவுக்கு அவளது தாய் மாமா மூர்த்தி பெரிய சீர் வரிசையுடன் சடங்கு செய்ய இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, அடுத்து தனத்திற்கு சடங்கு செய்ய ஏற்பாடு செய்ய மாமனாக மணிவண்ணன் சீர் வரிசைகளை வைத்து சடங்கை செய்து முடிக்க பிறகு மாயாவுக்கு சடங்கு செய்ய வேண்டும் என சொல்ல பத்மா அவளுக்கு சீர் செய்ய யார் இருக்கா? முடிக்க வேண்டியது தான் என்று சொல்ல ஜானகி வருத்தப்பட மாயாவும் பீல் பண்ணுகிறாள். 

இந்த நேரம் பார்த்து மணிவண்ணன் தனத்துக்கு நான் தாய் மாமா என்றால் மாயாவுக்கும் நான் தாய் மாமன் தான், அவளுக்கும் நான் தான் சீர் செய்வேன் என சடங்குகளை செய்ய மாயா, ஜானகி மகிழ்ச்சி அடைகின்றனர். 

மேலும் படிக்க | எழிலை கட்டிப்பிடித்த சுடர்..கடுப்பான மனோகரி! நினைத்தேன் வந்தாய் குளுகுளு எபிசோட்..

பிறகு முறை மாமனாக சீனு மூணு பேருக்கும் மோதிரம் போட ஷாரு காதலோடு அதை ஏற்க தனம் மகிழ்ச்சியோடு கையை காட்ட மாயா விருப்பமின்றி போட்டு கொள்கிறாள். ஆனால் சீனு மாமாவுக்கு மோதிரம் போட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். இதே போல் நம்ம கல்யாணமும் நடக்கும் என மனதில் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறான். 

மாயா நடந்து முடிந்த சடங்கை நினைத்து ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறாள். பிறகு மணிகண்டனை மொட்டை மாடியில் பார்த்து இதுவரைக்கும் நான் உங்ககிட்ட அதிகம் பேசினது கூட கிடையாது, ஆனால் சபையில் என்னை விட்டு கொடுக்காமல் சீர் செய்தீங்க. எனக்கு இந்த வீட்ல தனம், ஜானகி பெரியம்மாவை தவிர்த்து யாருமே இல்லாமல் தனியாக இருப்பது போல் பீல் பண்ணேன், ஆனால் இப்போ எனக்காக எல்லாரும் இருக்கீங்க என்று சந்தோஷமாக பேச அதை எதேர்ச்சையாக பார்க்கும் ஜானகி ரொம்ப சந்தோஷப்படுகிறாள். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: தர்மலிங்கத்துக்கு நேர்ந்த அவமானம்.‌. வில்லிகளுக்கு ஷாக் கொடுத்த கார்த்திக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News