மாயா எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் சீரியல் அப்டேட்!

Sandhya Raagam: இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி மாயாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - RK Spark | Last Updated : Nov 1, 2023, 01:04 PM IST
  • ஜானகி மடியில் உயிரை விட்ட சந்தியா.
  • மாயா எடுக்க போகும் முடிவு என்ன?
  • சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
மாயா எடுக்க போகும் முடிவு என்ன? சந்தியா ராகம் சீரியல் அப்டேட்! title=

தமிழ் சீரியலுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளுக்கு இடையே சீரியல் டிஆர்பியில் கடும் போட்டி இருக்கிறது. ஒவ்வொரு தொலைக்காட்சிக்கும் ஒரு சில சீரியல்கள் பெரிய பிராண்டாகவும், பாப்புலராகவும் இருக்கின்றன.  அந்தவரிசையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு சந்தியா ராகம் சீரியல் அடையாளமாக இருக்கிறது. மிகவும் பிரபலமாக இருக்கும் இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. தினம் தினம் புதிய திருப்பங்களுடன் செல்லும் சந்தியா ராகம் சீரியலில் அடுத்த புதிய திருப்பம் ஒன்று இன்றைய எபிசோடில் நிகழ இருக்கிறது. 

மேலும் படிக்க | இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ்? இயக்குனர் இவரா?

 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஜானகி மாயாவை தேடி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது மாயா, பின்னாடியே ஓடி வரும் ஜானகியை கண்டு கொள்ளாமல் காரை எடுத்து கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறாள். இங்கே வீட்டில் சந்தியா டிவியில் மாயாவின் அரங்கேற்றத்தை பார்த்து சந்தோசப்பட்ட நிலையில் மாயா வந்ததும் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து உண்மையை மறைக்க முயற்சி செய்கிறாள். 

santhiya

ஏன் மம்மி வர என்று கேட்டு கொண்டிருக்கும் மாயா ஒரு கட்டத்தில் அவளது கையில் ட்ரிப்ஸ் போட பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள், அங்கே டாக்டர் இருப்பதையும் அப்போது தான் கவனிக்கிறாள். ஜானகியும் வீட்டிற்கு வந்துவிட மாயாவிடம் சந்தியாவுக்கு கேன்சர் என்ற உண்மையை அடைகின்றனர். தனால் மாயா உடைந்த போக சந்தியா ஜானகியை கூப்பிட்டு எனக்கு பிறகு என் பொண்ணை நீ தான் பார்த்துக்கணும் என சத்தியம் வாங்கி கொண்டு உன் மடியில் படுத்துக்கவா? என்று கேட்டு ஜானகி மடியில் தலை வைத்து படுத்து உயிரை விடுகிறாள். அனைவரும் கதறி துடித்து சந்தியாவை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய தொடங்குகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? மாயா எடுக்க போகும் முடிவு என்ன என்பதை அறிந்து கொள்ள சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஸிஈ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சீதா ராமன் அப்டேட்: தவறை ஒப்பு கொண்ட ராமின் தங்கைகள், மாஸ் காட்டி மகாவுக்கு ஷாக்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News