அவமானத்தால் ரத்னாவுக்கு சண்முகம் கொடுத்த வாக்கு.. சந்தோஷத்தில் சௌந்தரபாண்டி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் ரத்னாவின் நிச்சயதார்த்தம் நின்று போன நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 19, 2023, 12:57 PM IST
  • வெங்கடேஷ் வீட்டு வாசலில் வந்து நிற்க இதை பார்த்து சண்முகம் கோபம் அடைகிறான்.
  • செல்லக்கனி மட்டும் சோகமாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறாள்.
  • சண்முகம் தங்கைகள் நான்கு பேருக்கும் சாப்பாடு ஊட்டி விடுகிறான்.
அவமானத்தால் ரத்னாவுக்கு சண்முகம் கொடுத்த வாக்கு.. சந்தோஷத்தில் சௌந்தரபாண்டி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட் title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. 

கடந்த வார வெள்ளிக்கிழமை எபிசோடில் ரத்னாவின் நிச்சயதார்த்தம் நின்று போன நிலையில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

அதாவது நிச்சயதார்த்தம் நின்று போன சோகத்தில் சண்முகம் வீட்டுக்கு கூட போகாமல் திருச்செந்தூர் கடற்கரையில் விழுந்து கிடக்க ஆனா ஊனாவும் வெட்டுக்கிளியும் இவனை தேடி அலைகின்றனர்.  ஒரு வழியாக சண்முகம் கடற்கரையில் இருப்பதை பார்த்து வந்து என்ன சண்முகம் இங்க படுத்துட்டு இருக்க என்று கேட்க ஏன் செத்துப் போயிடுவேனு நினைச்சீங்களா என்று தனது வருத்தத்தை பதிவு செய்கிறான். 

நீயே இப்படி வருத்தப்பட்டு கிடந்தா உன்னுடைய தங்கச்சிங்களுக்கு யார் ஆறுதல் சொல்வது என சண்முகத்துக்கு ஆறுதல் சொல்லி வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். 

மறுபக்கம் சௌந்தரபாண்டி ரத்னாவின் நிச்சயதார்த்தம் நின்று போனதை நினைத்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க முத்துப்பாண்டி தனக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லாதது போல அப்பாவின் சந்தோஷத்தை பார்த்து ரசிக்கிறான். 

ஷண்முகம் அவனுடைய தகுதிக்கு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும் அதை விட்டுட்டு இப்படி அகல கால் வச்சா அவமானப்பட்டு தான் நிற்க வேண்டும் என சௌந்தர பாண்டி பேச அதை கேட்க முடியாமல் பாக்கியம் அங்கிருந்து நகர அவளைக் கூப்பிட்டு வச்சு சௌந்தரபாண்டி இன்னும் அவமானப்படுத்தி பேசுகிறான். 

 மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி - அண்ணா இன்றைய எபிசோட் அப்டேட்

அதன் பிறகு சண்முகம் வீட்டுக்கு வர ரத்னா அவனை கட்டிப்பிடித்து கதறியழ தங்கைகள் எல்லோரும் வருத்தப்பட சண்முகம் எதுவும் நடக்காது போல எல்லோருக்கும் ஆறுதல் சொல்கிறான். அந்த குடும்பம் எப்படின்னு இப்பவே தெரிஞ்சு போச்சு அதனால இந்த நிச்சயம் நின்னு போனது நல்லது தான். இந்த வாத்தியார் மாப்பிள்ளை இல்லனா என்ன உனக்கு நான் கலெக்டர் மாப்பிள்ளை கட்டி வைத்து அவங்க முகத்தில் கரியை பூசுறேன் என ரத்னாவுக்கு ஆறுதல் சொல்கிறான். 

பிறகு செஞ்சு வச்ச சாப்பாடு எல்லாம் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துவிடலாம் அவங்களாவது சாப்பிட்டுட்டு நம்மள வாழ்த்தட்டும் என சண்முகம் சொல்கிறான். அதைத்தொடர்ந்து சண்முகம் தங்கைகள் நான்கு பேருக்கும் சாப்பாடு ஊட்டி விட நான்கு பேரும் சண்முகத்துக்கு சாப்பாடு கொடுக்க சந்தோஷமாக சாப்பிடுகிறான். 

இதைத்தொடர்ந்து செல்லக்கனி மட்டும் சோகமாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க சண்முகம் என்ன ஆச்சு என கேட்க அப்பத்தா நீ ஒரு அனாதை நீ இந்த வீட்டுக்கு வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்குது என திட்டியதை சொல்லி வருத்தப்படுகிறாள். சண்முகம் அப்படியெல்லாம் கிடையாது நீ வந்த பிறகுதான் இந்த வீட்ல எல்லாமே வந்தது என சொல்கிறான்.

மேலும் செல்லக்கனி ஒரு அனாதை, திருச்செந்தூர் சுனாமியில் அவளது குடும்பம் மொத்தமும் இறந்து போன நிலையில் சண்முகம் அவளை வீட்டுக்கு அழைத்து வந்த கதையையும் சொல்லி அவளை சமாதானம் செய்கிறான். 
 
மறுநாள் எல்லோரும் ஸ்கூல், காலேஜ் கிளம்ப சண்முகம் அவர்களை அழைத்துச் செல்ல தயாராக ரத்னா நானும் ஸ்கூலுக்கு வரேன் என்று சொல்ல சண்முகம் வெங்கடேஷ் அதே ஸ்கூல்ல தானே வேலை செய்கிறான், இப்பவே போனால் உனக்கு மனசு கஷ்டமா இருக்கும் ஒரு நாலு நாள் கழிச்சு போ என்று சொல்ல ரத்னா இல்ல வீட்ல இருந்தா தான் கஷ்டமாக இருக்கும் என்று சொல்ல தங்கைகளும் அக்கா வேலைக்கு போகட்டும் என சொல்கின்றனர். 

அதன் பிறகு சண்முகம் ரத்னாவையும் கூட்டிக்கொண்டு கிளம்ப தயாராக அந்த சமயம் பார்த்து வெங்கடேஷ் வீட்டு வாசலில் வந்து நிற்க இதை பார்த்து சண்முகம் கோபம் அடைகிறான். 

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் அப்டேட்: அசிங்கப்பட்ட ஷண்முகம்.. என்ட்ரி கொடுக்கும் முத்துப்பாண்டி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News