வெளிவந்த ஆதியின் ரகசியம்! அடுத்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்!

Idhayam Serial Update : ஆதியின் இதய ரகசியம்.. அதிர்ச்சி கொடுத்த ஸ்வேதா, அடுத்து நடந்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்   

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2024, 02:47 PM IST
  • இதயம் தொடரில் நடந்தது என்ன?
  • ஆதியின் ரகசியம் வெளிவருகிறது!
  • சுவேதா செய்த சூழ்ச்சி..
வெளிவந்த ஆதியின் ரகசியம்! அடுத்தது என்ன? இதயம் சீரியல் இன்றைய அப்டேட்! title=

Idhayam Serial Update : ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் இதயம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் ஆதி பாரதிக்காக தனது மொத்த குடும்பத்தையும் எதிர்த்து பேசிய நிலையில் இன்று நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது ஆதி ஸ்வேதா நீ எதுக்காக இதெல்லாம் பண்ணனும்னு எல்லாத்தையும் தெரிஞ்சுட்டு தான் பேசாம இருக்கேன், நீ திரும்பத் திரும்ப பாரதி விஷயத்துல தலையிடுவதை இதோட நிறுத்திக்க என்று வார்னிங் கொடுக்கிறான். 

இதைக் கேட்ட சாரதா அப்போ நாங்க எதுவுமே பேசக்கூடாதா என்று கேள்வி கேட்க ஆதி நான் அப்படி சொல்ல வரல நான் உயிரோடு இருப்பேனா இருக்க மாட்டேனானு தெரியாத போது இந்த குடும்பம் மொத்தமும் ஒண்ணா சேர்ந்து என் பக்கத்திலேயே இருந்து என்ன காப்பாத்துனீங்க அந்த உதவி எல்லாம் நான் என்னைக்கும் மறக்க மாட்டேன் அப்படி மறந்தா நான் மனுஷனே கிடையாது என்று சொல்கிறான். 

அதே சமயம் பாரதி தமிழ் இவங்க ரெண்டு பேரும் எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.. இவங்களை எதுக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று பேச ஸ்வேதா மாமா உங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்.. என்னென்னமோ செய்திருக்கேன் அதெல்லாம் உங்களுக்கு தெரியவந்தா தாங்க மாட்டீங்க என்று சொல்கிறாள். ஆதி அப்படி என்ன செய்த இப்பவே சொல்லு என்று சொல்ல ஆதியின் இதயத்தில் ஸ்வேதா கை வைக்க அனைவரும் அதிர்ந்து போக சரியான நேரம் வரும்போது நானே அந்த விஷயத்தை சொல்லுவேன் என்று சொல்ல ஆதி குழப்பத்தோடு ரூமுக்கு வருகிறான். 

பிறகு பாரதியை பார்த்ததும் இன்னைக்கு என்ன நாள் என்று கேட்க பாரதி மண்டே என்று சொன்னதும் ஆதி ஹனிமூன் டே.. ஹனிமூன் போய் இருந்தா நடக்க வேண்டியது எல்லாம் நடந்து இருக்கும் என்று சொல்லி பாரதியை நெருங்க பாரதி காதலிக்கும் போது இங்க கூட்டிட்டு போன அங்க கூட்டிட்டு போவேன் ஒன்னா தேதி உலகத்தையே  சுத்தி பாக்கலாம்னு சொல்லிட்டு இப்போ சாதாரணமா இந்த விஷயத்தை முடித்துக்கொள்ளலாம் என்று பார்க்கிறீர்களா என்று கேட்க ஆதி அப்போ அனிமூன் போனா தானே என்று திருப்பி கேட்க பாரதி ஆமாம் என்று சொல்ல ஆதி சரி ஓகே என்று படுத்து தூங்க சென்று விடுகிறார். 

பாரதி ஆதியை சேர்ந்த ஆதி நான் தூங்கிட்டேன் என்று சொன்ன நான் அந்த அர்த்தத்துல சொல்லல என்று ஆதியை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறாள் பாரதி. பிறகு ஆதி எனக்கு உங்க மேல ஒன்னும் கோவம் இல்ல உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஓகே தான் என்று கேட்ட நெருங்கி வந்து காத்திருப்பதும் நல்லா தான் இருக்கு என பாரதியின் கையை பிடித்து முத்தமிடுகிறான்.

ஆதி தூங்கிய பிறகு பாரதி தூக்கம் வராமல் கார்டனின் வந்து உட்கார்ந்து ஆதி தனக்காக செய்த விஷயங்களை நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருக்க திடீரென இரு குரல் கேட்க பாரதி பயந்து போக ஒரு உருவம் இங்கும் அங்கும் ஓட இன்னும் பயந்து போகிறாள். பிறகு ஆதி பின்னாடி வந்து நின்று பாரதியை பயமுறுத்துகிறான். 

பிறகு போங்க ஆதி பயந்துட்டேன் என்று பாரதி அவனைப் போட்டு அடிக்க ஆதி அடிக்காதீங்க பாரதி என் இதயத்துல நீங்கதான் இருக்கீங்க அப்புறம் உங்களுக்கு தான் வலிக்கும் என்று டயலாக் அடிக்கிறார். இந்த நேரம் பார்த்து குல்பி வண்டி வர பாரதி குல்பி வேண்டும் என்று கேட்க ஆதி குல்ஃபி வாங்கி வந்து கொடுத்து இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு சாப்பிட்டுக் கொள்கின்றனர். 

Idhayam

அடுத்ததாக மறுநாள் காலையில் ஆதி பாரதி ஆகியோர் தமிழை ஸ்கூலுக்கு ரெடி செய்து கீழே அழைத்து வருகின்றனர். கீழே வந்த தமிழ் சாரதாவிடம் இன்று பாட்டி நான் இன்னிக்கி முதல் நாள் புது ஸ்கூலுக்கு போறேன் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழ சாரதா குழந்தையை ஆசிர்வாதம் செய்து விபூதி வைத்து விடுகிறாள்.

பிறகு தமிழ் எனக்கு உங்க கையால பென்சில் பேனா இந்த மாதிரி ஏதாவது கிப்ட் கொடுங்க நான் ஸ்கூலுக்கு கொண்டு போக போறேன் என்று சொல்ல சாரதா ஜாமென்ட்ரி பாக்ஸ், பென்சில், பேனா ஆகியவற்றை கிப்டாக கொடுத்து அனுப்புகிறாள். 

மேலும் படிக்க | அண்ணா சீரியல்: குழந்தைகளை கடத்தி நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச் போட்ட சௌந்தரபாண்டி.. தேர்தலில் நடக்கப் போவது என்ன?

பிறகு ஆதி உனக்கு பாட்டி மேல கோபமே இல்லையா என்று தமிழிடம் கேட்க எனக்கு பாட்டியை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கும் என்னை சீக்கிரம் பிடிக்கும் என்று சொல்கிறாள். பிறகு தமிழை ஸ்கூலுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஆதி நீங்க குழந்தைங்க ரொம்ப நல்லா வளர்த்து இருக்கீங்க இப்படி ஒரு பொண்ணு கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் என்று பேச பாரதி தமிழும் இப்படி ஒரு அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்கிறாள். 

அப்போ தமிழ் மட்டும் தானா நீங்க இல்லையா என்று ஆதி ரொமான்ஸ் மோடிக்கு செல்ல பாரதி விடுங்க ஆபீஸ் கிளம்பனும் நான் போய் குளிக்கணும் என்று கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இதயம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | தீப்பற்றி எரியும் போட்டோ! தீயை அணைத்து கையில் காயத்தால் அவதிப்படும் சுடர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News