நீட்: 12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலி!

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் துவங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என இந்திய மருத்துவ கவுன்சிலிங் தெரிவித்துள்ளது. 

Last Updated : Jun 4, 2018, 03:30 PM IST
நீட்: 12ம் தேதி முதல் எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலி! title=

எம்பிபிஎஸ் முதல் கட்ட கவுன்சிலிங் வரும் 12ம் தேதி முதல் துவங்கி 24ம் தேதி வரை நடைபெறும் என இந்திய மருத்துவ கவுன்சிலிங் தெரிவித்துள்ளது. 

2-வது கவுன்சிலிங் ஜூலை 6 முதல் துவங்கி 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வரும் 25ம் தேதி தொடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக இன்று, நீட் தேர்வு முடிவுகள் cbseneet.nic.in என்ற இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) CBSE நடத்தியது.

தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தமிழ்நாட்டை தவிர வெளி மாநிலங்களிலும் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால் மாணவ-மாணவிகளும், பெற்றோரும் கடும் அதிருப்தி அடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் எம்.பி.பி. எஸ்., பிடிஎஸ், இயற்கை மருத்துவம் போன்றவற்றுக்கான நீட் தேர்வுகள் கடந்த மே 6-ம் தேதி நடந்து முடிந்தது.

மே 6-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான விடைகள் பட்டியல் சிபிஎஸ்இ இணையதளத்தில் கடந்த 25ம் தேதி வெளியிடப்பட்டன. தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை எழுதியுள்ளனர். 

இந்நிலையில் நாளைய தினம் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் நீட் தேர்வின் முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்ககது.

Trending News