தூத்துக்குடி: போக்குவரத்துக் கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீச்சு!

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Last Updated : May 24, 2018, 01:21 PM IST
தூத்துக்குடி: போக்குவரத்துக் கழக பணிமனையில் பெட்ரோல் குண்டு வீச்சு! title=

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று முன்தினம் 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் சுமார் 13 உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். குருவியை சுடுவது போல் போலீஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளதால் அனைவரும் கொந்தளிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் துப்பாக்கிச் சூடும் , தடியடியும் நடத்தப்பட்டது. மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆட்சியரும், மாவட்ட எஸ்.பி.யும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

இன்று தமிழ்நாடு வணிகர் சங்கம் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்த வணிகர் சங்கம் முடிவு செய்துள்ளதை அடுத்து இன்று காலை முதல் கடைகள் மூடப்பட்டு கிடந்தன. மேலும் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில்  தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இதனால், அந்த பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Trending News