எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..!

Viral Video of King Cobra: வைரலாகி வரும் இந்த வீடியோவில், பாம்பு எப்படி இருமல் சிரப் பாட்டிலை விழுங்கி அவதிப் படுகிறது என்பதை காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 9, 2024, 10:48 AM IST
  • நமக்கு தீங்கு விளைவிக்காத எந்த ஒரு உயிரினத்தையும் துன்புறுத்துவது தவறு.
  • பாம்பின் வீடியோ வைரலாகி வருகிறது.
எதையோ விழுங்கி அவதிப்படும் நாகம்..! வைரலாகும் வீடியோ..! title=

வைரல் வீடியோ: இணைய உலகில் பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்கு, பாம்பு, நாய், புலி, சிங்கம் ஆகிய விலங்குகள் பற்றிய பல வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றிடன் குறிப்பாக பாம்புகளின் வீடியோகள் வெகுவாக வைரலாகிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | மூச்சுவிடும் பூமி... இணையத்தில் வைரலாகும் அதிசய வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க

இந்த வீடியோவில், பாம்பு தவறுதலாக இருமல் மருந்து பாட்டிலை விழுங்குவிதை நாம் காணலாம். இந்த வீடியோவில் நாம் காணும் காட்சிகள் நம்மை சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளன. இந்த வீடியோ பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது. 

சமூகவலைத்தளங்களில் மக்களின் கவனத்தை ஈர்த்து வரும் இந்த வீடியோவில் காலி மைதானத்தில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்வதை காணலாம். அங்கு இருமல் சிரப் பாட்டிலையும் நாம் காண முடிகிறது. அந்த பாம்பு அந்த பாட்டிலை தனது இரையாகக் கருதி விழுங்கத் தொடங்குவதை காணலாம். ஆனால் இருமல் சிரப் பாட்டிலை அவரால் முழுமையாக விழுங்க முடியவில்லை. பாட்டில் தாடையில் சிக்கிக் கொள்கிறது. பாம்பினால் தாடையில் இருந்து பாட்டிலை வெளியில் எடுக்கவும் முடியவில்லை. அப்போது அங்கிருந்த மக்கள் பாம்பின் வாயில் இருந்த பாட்டிலை அகற்ற முயன்றனர். மிகுந்த முயற்சிக்குப் பிறகு அதன் வாயிலிருந்து பாட்டில் அகற்றப்பட்டது.

வீடியோவை இங்கே காணுங்கள்:

வாயிலிருந்து பாட்டில் வெளியே வந்தவுடன் பாம்பு நிம்மதிப் பெருமூச்சு விட்டு வேறு இடத்திற்குச் சென்றது. இதன் மூலம் மக்கள் மனித நேயம் காட்டி பாம்பின் உயிரை காப்பாற்றினர். இந்த வீடியோவை இந்திய வன அதிகாரி சுசாந்தா நந்தா தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க | Viral Video : “காலுக்கு மசாஸ் பண்ணு...” பாகனிடம் செல்லமாக சேட்டை செய்த யானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News