காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் சச்சின்! வைரல் வீடியோ!

சச்சின் டெண்டுல்கர் காயமடைந்த பறவையை மீட்டு அதற்க்கு உணவளித்து பராமரித்த வீடியோ ஒன்று இணையத்தில் அதிக ஈர்ப்பை பெற்றுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 27, 2022, 05:54 PM IST
  • சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர் சச்சின்.
  • கடற்கரையோரத்தில் காயமடைந்த பறவையை காப்பாற்ற முயல்கிறார்
காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் சச்சின்! வைரல் வீடியோ! title=

இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.  சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர், இவரை ஏராளமான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர், அவர்களுக்காகவே இவர் பலவிதமான பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்று வருகிறது.  

மேலும் படிக்க | பாண்டா குட்டிக்கு புட்டி பால் கொடுத்த ஊழியர்! வைரலாகும் வீடியோ!

அந்த வீடியோவில், சச்சின் கடற்கரையோரத்தில் காயமடைந்த பறவை இருப்பதை கண்டு, அந்த பறவையின் உயிரை காப்பாற்ற முயல்கிறார்.  அந்த பறவையை தனது கைகளில் எடுத்து வைத்துக்கொண்டு அந்த பறவைக்கு சிறிது தண்ணீர் கொடுக்கிறார்.  பின்னர் அந்த பறவையை கைகளில் ஏந்தி, அதற்கு உணவளிக்க இடம் தேடிக்கொண்டு நடந்து செல்கிறார்.  அதனையடுத்து பறவைக்கு ஆறுதல் கூறும் விதமாக 'இது நிச்சயம் பிழைத்துவிடும்' என்று நம்புகிறேன் என்று கூறுகிறார்.  இவ்வாறு பறவையிடம் பேசிக்கொண்டே சென்றவர் அந்த வழியில் சென்ற ஒருவரிடம் இந்த பறவையை காப்பாற்ற எங்கு கொண்டு செல்வது என்று கேட்டதோடு, 'இந்த பறவை காப்பாற்றப்பட வேண்டும், இதனை இப்படியே விட்டுவிடக்கூடாது' என்றும் கூறுகிறார்.

இறுதியாக சச்சின் ஒரு உணவகத்தை அடைகிறார், அங்கு சென்றவர் அங்குள்ள ஊழியர்களிடம் பறவைக்கு உணவினை கேட்க, அங்கிருந்த ஊழியர்கள் பரவி உண்பதற்கு ஏற்ற சில விதைகளை கொடுக்கின்றனர். அதனை சச்சின் அந்த பறவைக்கு வழங்குகிறார், பின்னர் அந்த பறவைக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பறவையின் உடல்நிலையை சோதித்த நபர் சச்சினிடம், 'பறவையின் இறக்கைகள் நல்ல நிலையில் தான் இருக்கிறது, ஆனால் அதன் இடது காலில் மற்றும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது' என்று கூறுவதுடன் இந்த வீடியோ நிறைவு பெறுகிறது.

 

இந்த வீடியோவை இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவுடன் 'கொஞ்சம் அக்கறை மற்றும் பாசம் இருந்தால் நாம் இன்னும் நீண்ட தூரம் சென்று நம் உலகத்தை இன்னும் சிறந்த இடமாக மாற்றலாம்' என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.  இந்த காட்சியை கண்ட நெட்டிசன்கள் சச்சின் டெண்டுல்கரின் மனித நேயத்தை பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆற்றை அந்தரத்தில் கடக்கும் கோழி - Viral Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News