11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்டர் அவதாரம்!

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் அனைத்து வகை திறமைகள் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘வீராசாமி’. கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. 

Last Updated : May 18, 2018, 05:05 PM IST
11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டைரக்டர் அவதாரம்! title=

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பாடகர் அனைத்து வகை திறமைகள் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘வீராசாமி’. கடைசியாக அவர் நடிகர் விஜய் சேதுபதியுடன் ‘கவண்’ படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் அவரின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டது. 

இந்நிலையில் தற்போது, 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் டி.ராஜேந்தர். இந்தப் படத்தை அவரே தயாரித்து இயக்கவுள்ளார். இந்த படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை நமீதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இப்டத்தில் முக்கிய வேடங்களில் ராதாரவி, ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கவுள்ளனர். 

விரைவில் படத்தின் மற்ற நடிகர்கள்,  பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News