பாம்பின் வாலை பிடித்து விளையாடும் சிறுவன்..! இதயத்துடிப்பை எகிற வைக்கும் ‘திக் திக்’வீடியோ..!

Snake Viral Video: ஒரு சிறுவன் பாம்பின் வாலைப்பிடித்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jul 27, 2023, 12:34 AM IST
  • புதுதில்லியை சேர்ந்த சிறுவனின் வீடியோ வைரல்.
  • பாம்பின் வாலை பிடித்து விளையாடுகிறான்.
  • மக்கள் கண்டனம்.
பாம்பின் வாலை பிடித்து விளையாடும் சிறுவன்..! இதயத்துடிப்பை எகிற வைக்கும் ‘திக் திக்’வீடியோ..! title=

நம்மில் பலருக்கு பலவிதமான பயங்கள் இருக்கும். குறிப்பாக, பெரும்பாலானோருக்கு பாம்பு குறித்த பயம் இருக்கலாம். ஊர்ந்து நகரும் விஷத்தன்மை உடைய பாம்புகளை பார்த்தாலே சிலர் பயத்தில் இறந்து விடுவர். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாம்பென்று வந்து விட்டால் தொடை நடுங்குவர். ‘பாம்பைக்கட்டால் படையும் நடுங்கும்..’ என்பது பழமொழி. அனால், இங்கே ஒரு சிறுவன், பெரிய பாம்பின் வாலைப்பிடித்து ஆட்டம் போடுகிறான். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. 

பாம்பின் வாலைப்பிடித்த சிறுவன்:

இணையத்தில் வைரலாகி வரும் இந்த சிறுவனுக்கு வயது 3-4 வரைதான் இருக்கும். இந்த சிறுவன் புது தில்லியை சேர்ந்தவன் என கூறப்படுகிறது. ஒரு பிரபலமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில்தான் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. வெளியான சில நாட்களுக்குள்ளாகவே, 64 ஆயிரம் லைக்ஸ்களுக்கு மேல் கடந்து தற்போது பல மில்லியன் வியூஸ்களை எட்டி வருகிறது இந்த வீடியோ. இதில் வரும் சிறுவன், தைரியமாக சுமார் 5 அடி நீள பாம்பின் வாலை கையில் பிடித்து அதனுடன் விளையாடுகிறான். அவன் கண்களில் துளியும் பயம் இல்லை. இவனை உயரம் அதிகமாக இருக்கும் அந்த பாம்பை, படாத பாடு படுத்துகிறான அந்த சிறுவன். அந்த குட்டி பையன் அசந்த நேரமாக பார்த்து, ‘ஆளை விட்றா சாமி..’ என்பது போல வேகமாக ஊர்ந்து செல்கிறது அந்த பாம்பு. சுமார் 18 விநாடிகளுக்குள் இருக்கும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வாயை பிளந்து கொண்டு பார்த்து வருகின்றனர். 

சர்ச்சையை கிளப்பியுள்ளது:

சிறுவனின் இந்த வீடியோ வெளியான பிறகு, இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து பலர் பதிவுகளை வெளியிட்டுள்ளனர். நெட்டிசன்கள் பலர், இதுதான் குழந்தையை பாதுகாப்பாக வளர்க்கும் முறையா..? என கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த குழந்தையின் பெற்றோருக்கு பொறுப்பு என்பதே இல்லையா எனவும் இன்னொரு தரப்பினர் கேட்டுள்ளனர். ஒரு சிலர் குழந்தைக்கு என்னாகி விடுமோ என பயந்து கொண்டிருக்க, ஒரு சிலரோ அந்த குழந்தையின் துணிச்சலை பார்த்து வியந்து போயுள்ளனர். சிலர், இது போன்ற செய்கைகள் நாளை ஆபத்தில் கொண்டு போய் விட்டுவிடும் என எச்சரிக்கின்றனர். 

மிகவும் ஆபத்து..!

பாம்புகளின் அடுத்த அசைவை நம்மால் கணிக்கவே முடியாது. அது மட்டுமன்றி அவை காட்டில் வாழும் ஊர்வன வகைகளுள் ஒன்று. விஷ ஜந்து என கருதப்படும் பாம்பை, சரியான வழிகாட்டிகள் இல்லாமல் கையாள்வதே மிகவும் தவறு. திறமையான பாம்பு பிடி வீரர்களே சமயங்களில் அவற்றிற்கு இரையாவதுண்டு. இந்த நிலையில் லைக்ஸ், வியூஸிற்காக ஒரு குழந்தையை இவ்வாறு செய்ய வைக்கலாமா என மக்கள் பலர் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்த வகையான செயல்களில் யாரும் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்த வேண்டாம் எனவும், தாங்களும் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதாக சிலர் அந்த குழந்தையின் வீடியோ கமெண்டில் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும் படிக்க | Viral News: நகை பணத்துடன் ஓடியே போன கில்லாடி மணமகள்: சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News