இது புதுசா இருக்கே! மகளின் தலையில் CCTV கேமரா வைத்த தந்தை! வைரல் வீடியோ!

Viral Video: பாகிஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மகளின் பாதுகாப்பிற்காக அவரது தலையில் சிசிடிவி கேமரா பொறுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Sep 14, 2024, 08:24 PM IST
  • தலையில் கேமராவுடன் காணப்படும் பெண்.
  • பாதுகாப்பிற்காக தந்தை இந்த ஏற்பாட்டை செய்துள்ளார்.
  • இணையத்தில் இந்த வீடியோ வைரல்.
இது புதுசா இருக்கே! மகளின் தலையில் CCTV கேமரா வைத்த தந்தை! வைரல் வீடியோ! title=

உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், உங்கள் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் தலையில் கேமரா வைக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று எப்போதாவது யோசித்துள்ளீர்களா? சமீபத்தில் இணையத்தில் வைரலான ஒரு வீடியோவில் பெண் ஒருவர் தலையில் CCTV கேமராவுடன் காணப்பட்டார். இது பார்ப்போரை குழப்பத்தில் ஆழ்த்தியது. எதற்கு தலையில் CCTV கேமராவை வைத்துள்ளார் என்று யோசித்தனர். இது குறித்து அந்த பெண் அளித்துள்ள பேட்டியில், தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், அவரது நடமாட்டத்தை கண்காணிக்க விரும்பவும் தனது தந்தை இப்படி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த தந்தை தான், அவரது மகளின் பாதுகாப்பிற்காக இப்படி தலையில்  சிசிடிவி கேமராவை பொறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க | இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்...

இந்த வீடியோ வெளியானதில் இருந்து சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது. மேலும் தந்தையின் இந்த செயல், நெட்டிசன்கள் மத்தியில் நிறைய கேள்விகளையும், விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் அளித்த பேட்டியில், "தனது தந்தையின் இந்த முடிவில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்றும், தற்போது சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை புரிந்து கொண்டு, எனது பாதுகாப்பை அதிகப்படுத்த எனது பெற்றோர் இப்படி செய்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், பாகிஸ்தானின் கராச்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் ஒரு பெண் உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அந்த பெண்ணின் தந்தை தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இவ்வாறு செய்துள்ளார். இது பாதுகாப்பின் உச்சம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். "எனது தந்தை தான், எனது தனிப்பட்ட பாதுகாப்பு காவலர், கராச்சியில் நடந்த சம்பவம் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது" என்று அந்த பெண் கூறினார். இந்த தனித்துவமான அணுகுமுறை சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க எவ்வளவு தூரம் செல்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க | குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News