அடுத்த மாதம் மாறும் சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நினைத்தது நடக்கும்

Saturn Transit: சனி பகவான் நீண்ட காலமாக வக்ர நிலையில் இருக்கிறார். அவர் வக்ர நிலையிலிருந்து அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 5, 2022, 04:40 PM IST
  • தற்போது சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார்.
  • இதன் காரணமாக மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது.
  • அதே சமயம் கும்பம், தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது.
அடுத்த மாதம் மாறும் சனியின் வக்ர நிலை: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம், நினைத்தது நடக்கும் title=

சனி வக்ர பெயர்ச்சி: சனி பகவான் தற்போது பிற்போக்கு நிலையில், அதாவது வக்ர நிலையில் இருக்கிறார். ஜூன் 5 ஆம் தேதி, சனி பகவான் மகர ராசியில் பிற்போக்கானார். இப்போது 141 நாட்களுக்கு பிற்போக்கு நிலையில் இருந்த பிறகு, சனி கிரகம் 23 அக்டோபர் 2022 அன்று வழக்கமான நிலைக்கு வருவார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒரு கிரகம் பிற்போக்கு நிலையில் இருந்தால், அதன் சுப பலன் குறைகிறது. சனி பகவான் நீண்ட காலமாக வக்ர நிலையில் இருக்கிறார். அவர் வக்ர நிலையிலிருந்து அக்டோபர் மாதத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதால் எந்த ராசிக்காரர்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

தற்போது சனி பகவான் மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். இதன் காரணமாக மிதுனம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி தசை நடக்கிறது. அதே சமயம் கும்பம், தனுசு, மகர ராசிக்காரர்களுக்கு சனியின் ஏழரை நாட்டு சனியின் தாக்கம் உள்ளது. அக்டோபர் 23 ஆம் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி, அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழைகிறார்.

இந்த ராசிக்காரர்களுக்கு சனியின் தசையில் இருந்து விடுதலை கிடைக்கும்:

- சனிபகவான் கும்ப ராசியில் நுழைவதால் தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை நாட்டு சனியின் தாக்கத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். 

- மிதுனம், துலாம் சனி தசையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

- இந்த காலத்தில், உங்களுக்கு ​​நல்ல செய்திகள் கிடைத்து மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படும். 

- வேலை மாற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் வேலையில் மாற்றம் காணலாம்.

மேலும் படிக்க | சூரியன் அருளால் அடுத்த 13 நாட்கள் இந்த ராசிகளுக்கு பொன்னான நேரமாக ஜொலிக்கும் 

இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிப்பார் சனி பகவான்: 

சனி பகவான் வக்ர நிலையில் இருந்து இயல்பு நிலைக்கு மாறுவதால் சில ராசிகளுக்கு சுப பலன்கள் ஏற்படும்.

- ரிஷபம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளுக்கு சனியின் இந்த இயக்கம் சாதகமாக அமையும். 

- இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். 

- எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு இருக்கும். நிதி நிலை மேம்படும்.

- குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

- கணவன் / மனைவி, குழந்தைகளுக்கு இடையில் அன்பு அதிகரிக்கும்.

- உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். 

- பணியிடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செப்டெம்பர் 5 முதல் இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டோ கொட்டுனு கொட்டும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News