பணமழை கொட்ட இந்த நேரத்துல கற்பூரத்த ஏத்துங்க, லட்சுமி கடாட்சம் பெருகும்

Vastu Dosh Removal Tips: வாஸ்து தோஷம் நாம் வாழ்க்கையில் பல எதிர்மறையைக் கொண்டு வரும். இதனால் பண இழப்பும் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், கிராம்பு மற்றும் கற்பூரத்தின் இந்த தீர்வு வாஸ்து தோஷத்தை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 29, 2022, 04:18 PM IST
  • சமையலறையில் கிராம்பு-கற்பூரத்தை ஏற்றவும்.
  • நிதி நெருக்கடி தடுக்க வாஸ்து டிப்ஸ்.
  • வாஸ்து தோஷம் நீக்கும் குறிப்புகள்.
பணமழை கொட்ட இந்த நேரத்துல கற்பூரத்த ஏத்துங்க, லட்சுமி கடாட்சம் பெருகும் title=

வீட்டிற்கான வாஸ்து டிப்ஸ்: வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டின் ஒவ்வொரு திசையையும், பொருட்களையும் பராமரிப்பது குறித்து சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளை பின்பற்றாத போது வாஸ்து தோஷங்கள் ஏற்பட்டு, இதனால் நம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அதன்படி வாஸ்து சாஸ்திரத்தில், இந்த வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் நம் வாழ்க்கையில் ஏற்படும் எதிர்மறை தாக்கத்தை நீக்கி பாசிட்டிவ் ஆற்றலை தருகின்றது. அத்தகைய வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கான சில பயனுள்ள வழிகளை இன்று நாங்கள் கொண்டு வந்துள்ளோம். இதைச் செய்வதன் மூலம் நிதி நெருக்கடி நீங்கி, வாழ்க்கையில் வெற்றி உண்டாகும்.

வீட்டின் வாஸ்து தோஷங்களை நீக்க டிப்ஸ்:

- வீட்டின் வாஸ்து தோஷத்தை உங்களால் நீக்க முடியாவிட்டால் என்றால், அங்கே 2 கற்பூரத்தை வைக்கவும். அவை உருகும்போது, ​​​​மீண்டும் ஒரு புதிய கற்பூரத்தை அதே இடத்தில் வைக்கவும். வாஸ்து தோஷங்களை நீக்கும் சக்தி கற்பூரத்திற்கு உண்டு. இது அந்த பகுதியின் எதிர்மறை ஆற்றலை நேர்மறையாக மாற்ற உதவும்.

மேலும் படிக்க | சனி பெயர்ச்சி பலன் 2023: வேலையில் சிக்கல் யாருக்கு, சனியின் ஆட்டம்

- உங்களுக்கு அடிக்கடி பண இழப்பு / நெருக்கடி ஏற்பட்டால், காலை அல்லது மாலை நேரத்தில் சமையலறையில் ஒரு பாத்திரத்தில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை ஏற்றவும். முடிந்தால், இந்த பரிகாரத்தை தினமும் செய்யவும், அதுவும் வெள்ளி கிண்ணத்தை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.

- வேலையில் தொடர்ந்து நீங்கள் தடைகள் சந்தித்தால், சனிக்கிழமையன்று குளிக்கும் நீரில் சில துளிகள் கற்பூர எண்ணெயை ஊறவும். மேலும், வியாழக்கிழமை ஒரு சிட்டிகை மஞ்சள் கலந்த நீரில் குளிக்கவும். இதனால் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் உங்களுக்கு துணை நிற்கும்.

- உங்கள் வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டால், சில நாட்களுக்கு தினமும் பசு நெய்யில் கற்பூரத்தை தோய்த்து அதை ஏற்றவும். இது வீட்டில் பாசிட்டிவிட்டியை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சி, அமைதியை தரும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்கலை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதனின் அருளால் உருவாகும் பத்ர ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நேரம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News