ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம்

Guru Vakri: இந்த ராசிக்காரர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!! குரு பகவானின் வக்ர பெயர்ச்சியால் ஜூலை 29 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 19, 2022, 12:37 PM IST
  • வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நகர்வு காலத்தில் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
  • பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படும்.
  • உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
ஜூலை 29 முதல் இந்த ராசிகளுக்கு நல்ல நேரம்: குரு வக்ர பெயர்ச்சியால் குபேர யோகம் title=

குகு வக்ர பெயர்ச்சியால் ராசிகளில் தாக்கம்: ஜோதிடத்தில், வியாழன், அதாவது குரு பகவான் ஒரு முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். வியாழன் கிரகத்தின் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஜூலை 29 அன்று, தேவகுரு வியாழன் மீனத்தில் வக்ரமாகப் போகிறார். அதாவது பிற்போக்கு நகர்வில் நுழையப் போகிறார். மேலும், அவர் நவம்பர் 24 வரை இந்த நிலையில் இருப்பார். ஜாதகத்தில் வியாழன் கிரகத்தின் நிலை சுபமாகவும், உச்சமாகவும் இருந்தால், அந்த நபர் மிக கீழ் நிலையில் இருந்தாலும், விரைவில் உச்சத்தை அடைந்து விடுவார். வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நிலை எந்த ராசிக்காரர்களுக்கு பலன் தரும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

கடகம்:

வியாழன் கிரகத்தின் பிற்போக்கு நகர்வு காலத்தில் கடக ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். இந்த நேரம் வியாபாரிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | ஜூலை 24 வரை இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் சிறப்பு அருள் கிடைக்கும் 

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு பண வரவுக்கான பல வழிகள் திறக்கும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் நிதி ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகளுடனான உறவுகள் பலப்படும். தொழில் முன்னேற்றத்திற்கு இந்த நேரம் சாதகமாக இருக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் / மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியான பொழுதை செலவிடுவீர்கள். குறிப்பாக, குழந்தைகள் மூலம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாட்டில் உள்ள உறவினர்களின் மூலம் நல்ல செய்தியை பெறுவீர்கள். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். பொருளாதார நிலையில் சாதகமான மாற்றம் ஏற்படும். இந்த காலத்தில் நீங்கள் பயணங்களை மேற்கொள்வீர்கள். இந்த பயணங்களால் நல்ல ஆதாயம் ஏற்படும். வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி லாபம் பெறலாம். இந்த நேரம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் வேலையில் பதவி உயர்வுடன் வருமான உயர்வையும் பெறலாம். முதலீடு லாபகரமாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

பணியிடத்தில் பல வெற்றிகளை பெறுவீர்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: ஆகஸ்ட் 10 வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News