IPL 2023: யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் ப்ரீத்தி ஜிந்தா - கலாய்த்த குஜராத் வீரர்

ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் என குஜராத் டைட்டன் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமியின் சமூக ஊடகங்களில் போட்டிருக்கும் பதிவு வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 16, 2023, 09:03 AM IST
IPL 2023: யார்க்கர் இல்லாமல் பந்துவீசுவார் ப்ரீத்தி ஜிந்தா - கலாய்த்த குஜராத் வீரர் title=

குஜராத் டைட்டன் அணியில் விளையாடி வரும் முகமது ஷமி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தாவுடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு இப்போது வைரலாகியுள்ளது. குஜராத் அணிக்கு வருவதற்கு முன்பு முகமது ஷமி பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார். அவரை ஏலத்தில் பஞ்சாப் அணி எடுக்காத நிலையில், குஜராத் அணியில் இடம்பிடித்தார் முகமது ஷமி. 

மேலும் படிக்க | IPL 2023: பினிஷ் செய்த ஷாருக்கான் - பரபரப்பான போட்டியில் பட்டையை கிழப்பிய பஞ்சாப்!

வியாழக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 153 ரன்கள் எடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் அணி ஒரு பால் மீதம் வைத்து தோற்கடித்தது. அதாவது 19.5வது ஓவரில் குஜராத் வெற்றி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்குப் பிறகு இரு அணி வீரர்களும் மொஹாலி மைதானத்தில் உரையாடினர். அப்போது முகமது ஷமி, தனது முன்னாள் அணி உரிமையாளரான பஞ்சாப் கிங்ஸ் அணியின் ப்ரீத்தி ஜிந்தாவை சந்தித்தார். அப்போது கலகலப்பாக அவருடன் உரையாடிய அவர், அப்போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

இருவரும் கலகலப்பாக உரையாடிக் கொண்டிருக்கும் அந்த புகைப்படத்துக்கு கேப்சனாக ப்ரீத்தி ஜிந்தா மட்டுமே யார்க்கர் இல்லாமல் பந்துவீசக்கூடியவர் என கிண்டலாகவும் எழுதியுள்ளார். அவரின் இந்த பதிவு இப்போது வைரலாகியுள்ளது. ப்ரீத்தி ஜிந்தாவின் புன்னகையை குறிப்பிட்டு தான் அவர் இப்படி எழுதியிருக்கிறார் என சிலர் கமெண்ட் அடிக்க, இன்னொருவர் ப்ரீத்தி ஜிந்தா யார்க்கர் கற்றுக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லை என கூறியுள்ளார். பஞ்சாப் அணி ஏலத்தில் ஏன் எடுக்கவில்லை என ப்ரீத்தி ஜிந்தாவிடம் கேட்டீர்களா என்றும் முகமது ஷமிக்கு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இந்தப் போட்டியில் முகமது ஷமியின் பந்துவீச்சு சிறப்பாக அமையவில்லை. 4 ஓவர்களை வீசிய அவர் 44 ரன்களை விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தார். முன்னாள் அணி மீதான பாசத்தின் காரணமாக இத்தனை ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டீர்களா? என்றும் சில நெட்டிசன்கள் ப்ரீத்தி ஜிந்தாவின் புகைப்படத்துக்கு கீழே கமெண்ட் அடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | டெல்லி அணியோடு ஐக்கியமான ரிஷப் பன்ட் - விராட் படையை வீழ்த்த கொடுத்த டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News