நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழாவிற்கு 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு!

நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது. ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 22, 2022, 05:13 PM IST
  • ஆஞ்சநேயர் ஜெயந்தி என்றலே நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும்.
  • நாமக்கல் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
நாமக்கல்லில் அனுமன் ஜெயந்தி விழாவிற்கு 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி நிறைவு! title=

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சாத்துப்படி செய்ய 1,00,008 வடைகள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவடைந்தது. நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 2 டன் பூக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாா்கழி மாத மூல நட்சத்திரம் அமாவாசை தினத்தில், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் சுவாமியின் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் நாளை நாமக்கல்லில் ஆஞ்சனேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி, சுவாமிக்கு 1,00,008 வடைகள் தயார் செய்யும் பணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் துவங்கி சற்று முன்னர் நிறைவடைந்தது.

இதன்பின் பட்டாட்சியர்கள் வடைகளை ஒன்றன் பின் ஒன்றாக கோர்த்து மாலையாக தயார் செய்து நாளை ஆஞ்சநேயருக்கு அணிவிப்பனர். மேலும் ஆஞ்சநேயர் ஜெயந்தி என்றலே நாமக்கல் நகரமே விழாக்கோலம் பூண்டு இருக்கும். அதேபோல ஆஞ்சநேயர் கோயிலில் பல்வேறு வண்ணங்களில் 2 டன் பூக்களை கொண்டு அலங்கரிக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல் பக்தர்கள் வரிசையில் நிற்க தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகிறது. 

ஆஞ்சனேயர் ஜெயந்தி விழாவையொட்டி, நாளை அதிகாலை 5 மணி முதல் 11 மணி வரை நாமக்கல் ஆஞ்சநேயர் வடைமாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதன் பின் நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம், பன்னீர் உள்ளிட்டவற்றாலான அபிஷேகமும், செர்ணாபிஷேகமும் நடைபெற உள்ளன. 

மேலும் படிக்க | சுக்கிரன் அருளால் புத்தாண்டின் ஆரம்பமே இந்த ராசிகளுக்கு அட்டகாசமாய் இருக்கும் 

மதியம் ஒரு மணியளவில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது. இவ்விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன் கலந்துகொள்ள உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பக்தா்கள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால், மாவட்டம் முழுவதும் உள்ள 500-க்கும் மேற்பட்ட போலீசார் கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா். 

மேலும் நாளை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மோகனூா் சாலை, திருச்சி சாலை, துறையூா் சாலை வழியாக சுவாமி தரிசனம் செய்வதற்காக நான்கு சக்கர வாகனங்களில் வருவோா், உழவா் சந்தை எதிரில் உள்ள சாலையில் பொய்யேரிக்கரை பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். 

திருச்செங்கோடு சாலையில் இருந்து வருவோா் நயாரா பெட்ரோல் பங்க் அருகில் உள்ள சாலை வழியாகச் சென்று பொய்யேரிக்கரையில் வாகனங்களை நிறுத்தலாம். சேலம் சாலை, சேந்தமங்கலம் சாலையில் வழக்கமான போக்குவரத்து இருக்கும். இருசக்கர வாகனங்களில் வருவோா் நாமக்கல் பூங்கா சாலையில் வாகனங்களை நிறுத்த வேண்டும். நாமக்கல் கோட்டை சாலை, பூங்கா சாலையில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது என காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசி! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News