குழந்தையை அடிக்க உரிமையில்லையா? 2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய்

குடும்பத்தையே நிர்மூலமாக்கிய கோபம்... குழந்தையை அடிக்க உரிமையில்லையா?  2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய்...

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Mar 17, 2022, 06:23 PM IST
  • குடும்பத்தையே நிர்மூலமாக்கிய கோபம்...
  • குழந்தையை அடிக்க உரிமையில்லையா?
  • 2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய்
குழந்தையை அடிக்க உரிமையில்லையா? 2 மகன்களை கொன்று தற்கொலை செய்த தாய் title=

குழந்தையை அடிக்க எனக்கு உரிமையில்லையா என்ற கோபத்தில், தனது இரண்டு மகன்களையும் கொன்றுவிட்டு, தற்கொலை செய்துக் கொண்ட தாயின் உச்சகட்ட கோபம் ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கிவிட்டது. 

சேலம் அருகே உள்ள சின்ன வீராணம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்.  விவசாயம் செய்து வரும் இவர், லாரி தொழிலையும் செய்துவருகிறார். இவரது மனைவி குறிஞ்சி தமிழ் பட்டதாரி. ராஜேஷ்-க்குறிஞ்சி தம்பதிகளுக்கு ஏழு வயதில் விமலன், 4 வயதில் கார்த்திக் என இரு மகன்கள் உள்ளனர். 

வீட்டின் மேல்மாடியில் ராஜேஷ் குடும்பத்துடன் வசித்து வந்தார். கீழ்த்தளத்தில் ராஜேஷின் பெற்றோர் முத்தம்மாள் மற்றும் ராமன் வசித்து வந்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான் சிறுவன் விமல். 

நேற்று மாலை ராஜேஷ் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்ததால் கதவைத் தட்டியுள்ளார் ஆனால் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | மனைவியை கொன்று கணவன் தற்கொலை 

வீட்டில் உள்ள மின் விசிறி ஒன்றில் குழந்தைகள் விமல் கார்த்திக் தூக்கில் சடலமாக காணப்பட்டனர். தொட்டில் கட்டும் கம்பியில் சேலையில் குறிஞ்சி தமிழ் தூக்கிட்டு சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

குடும்பமே சடலமாக தொங்கியதைப் பார்த்த ராஜேஷ் கூச்சலிட்டு கத்திய சப்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இரண்டு குழந்தைகளியும் குறிஞ்சியையும் கீழே இறக்கினார்கள்.

சம்பவம் தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூன்று சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முதல்கட்ட விசாரணையில் குழந்தையை படிக்கச் சொல்லி குறிஞ்சி அடித்திருக்கிறார். அதனை பார்த்த மாமியார் குழந்தையை அடிக்க கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. 

அதற்கு பிறகு  சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த ராஜேஷ் குழந்தையை அடித்தது குறித்து குறித்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கண்டித்துள்ளார்.  குழந்தையை அடிக்க கூடாது எனவும் கண்டித்துள்ளார்.

 

மேலும் படிக்க | மது குடிப்பதை கண்டித்த மனைவி; மனம் உடைந்த கணவர் தற்கொலை

அதன்பிறகு, ராஜேஷ் கடைக்குச் சென்றுவிட்டார். கணவன் திட்டியதால் மனமுடைந்த மனைவி குறிஞ்சி தமிழ், தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கில் தொங்க விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மூன்று பேரும் சடலமாக இருந்திருக்கின்றனர்.  சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

கணவன் திட்டியதால் குழந்தை மற்றும் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் படிக்க | பிறந்தநாளுக்கு அண்ணன் வராததால் மாணவி தற்கொலை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News