'கண்மணி அன்போடு காதலன்' - காதல் கடிதத்தை பகிர்ந்த விக்ரமன்! வெளியான ட்விஸ்டு - சிக்கிய கிருபா?

Bigg Boss Vikraman Controversy: விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு விக்ரமன் தற்போது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 17, 2023, 01:39 PM IST
  • விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் பல புகார்களை அடுக்கினார்.
  • தன்னை காதலித்து ஏமாற்றியதாக அந்த பெண் புகார் அளித்தார்.
  • இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து விக்ரமன் மௌனம் கலைத்தார்.
'கண்மணி அன்போடு காதலன்' - காதல் கடிதத்தை பகிர்ந்த விக்ரமன்! வெளியான ட்விஸ்டு - சிக்கிய கிருபா? title=

Bigg Boss Vikraman Controversy: விசிக கட்சியின் இணை செய்தித்தொடர்பாளராக இருப்பவர் தான் விக்ரமன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றால் அறம் வெல்லும் என்று அந்த நிகழ்ச்சியில் இவர் பேசிய அந்த வார்த்தை இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. அரசியலில் அதிக ஈடுபாடுடன் இருந்து வரும் விக்ரமன் மீது கிருபா முனுசாமி என்ற பெண் பல புகார்களை அடுக்கினார். அதில் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், தன் பணத்தில் பல விலையுயர்ந்த பொருட்களை வாங்கித்தந்ததாகவும் குற்றம்சாட்டி இருந்தார். 

இந்தச் சூழலில், விக்ரமன் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதில் கிருபா தனக்கு எழுதிய காதல் கடிதத்தையும், கிருபாவிடம் பெற்ற பொருட்களுக்கான பணத்தை திரும்பிக்கொடுத்ததையும், அவர் குறிப்பிட்டு அதற்கான ஆதாரத்தையும் அவர் இணைத்துள்ளார். இந்த ஆதாரங்களுடன், கிருபா முனுசாமி என் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது போலவே இந்தக் கதைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. இந்தப் பிரச்சினையில் ஒரே ஒரு நபர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார். அது நான் தான். 

மேலும் படிக்க | ஆளுநர், அமலாக்கத்துறை... போட்டுத்தாக்கிய முதலமைச்சர் ஸ்டாலின் - என்ன சொன்னார் தெரியுமா?

நாங்கள் 2020-ல் அறிமுகமானோம், அவர் முனைவர் பட்டத்திற்காக இங்கிலாந்து சென்றதில் இருந்து நன்றாக பழக ஆரம்பித்தோம். இப்போது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பழிவாங்கும் நோக்கத்திற்காகவும், எனது அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரவும் பரப்பப்படுகிறது. அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நியாயமற்ற கோரிக்கைக்கு நான் அடிபணிய மறுத்துவிட்டேன்.

என் மீது குற்றம் சுமத்தும் கிருபா எனக்கு கடந்த 2022ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தை இணைத்துள்ளேன்.  அதோடு கிருபாவின் சொந்த விருப்பத்தின் பேரில் அல்லது எனது தொழில்முறை நோக்கங்களுக்காக எனது வேண்டுகோளின் பேரில் அவர் வழங்கிய பொருட்களுக்கு நான் சொல்லியபடி பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளேன். எனக்குக் அவர் கொடுத்த அன்பளிப்புக்கு பணம் கொடுப்பதாக நான் உறுதியளித்திருந்தேன். மேலும், நான் உறுதியளித்தபடி முழுத் தொகையையும் உடனடியாக செலுத்திவிட்டேன்.

என் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டையும் முற்றிலும் மறுக்கிறேன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். குற்றச்சாட்டுகளை மறுதலிக்கவும், அவை ஒவ்வொன்றையும் சட்டத்தின் கீழ் அறியப்பட்ட முறையில் நிராகரிக்கவும் நான் முழுமையாக தயாராக இருக்கிறேன்" என்று எழுதி விளக்கமளித்துள்ளார். 

கிருபா முனுசாமி எழுதிய கடிதத்தில், 'உனக்கு அரசியல் மீது தான் ஆர்வம். ஆனால் எனக்கு உன்னுடன் இருக்க ஆசை. உன் குழந்தையை நான் பெற்றுக்கொள்ள விரும்புகிறேன்' என்றும் எழுதியுள்ளார். அதோடு கண்மணி அன்போடு காதலன் என்ற குணா பட பாடலை கேட்டு கேட்டு விக்ரமனுக்காக உருகியதாகவும் கிருபா குறிப்பிட்டுள்ளார். 

இந்த கடிதத்தில் விக்ரமன் தன்னை காதலிக்கவில்லை என்பதை தெளிவாக எழுதி இருக்கிறார் கிருபா. இதனையடுத்து கிருபா சுமத்திய குற்றச்சாட்டுகளில் பாதி பொய்யா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க | பிக்பாஸ் பிரபலம் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News