TN & புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு....

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 30, 2018, 01:34 PM IST
TN & புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.... title=

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு அடுத்த 48 மணி நேரம் சாதகமாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து வானிலை ஆய்வு மையம் இயக்குனர் கூறுகையில்...! 

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் அடுத்த இருதினங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

மேலும், வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் எனவும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

Trending News