கூட்டுறவுத் துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்!

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

Last Updated : Jul 14, 2019, 03:44 PM IST
கூட்டுறவுத் துறை காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! title=

கூட்டுறவுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல் மில் காலணியில், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா மற்றும் வானரமுட்டியில் மத்திய கூட்டுறவு வங்கி கிளை, அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.  

பின்னர் கோவில்பட்டி பள்ளி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோருடன் பங்கேற்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ நியாயவிலைக் கடைகளில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாயக் கடன்களுக்கு 1,257 கோடி ரூபாய் வட்டி மானியமாக தமிழக அரசு கொடுத்துள்ளது. தற்போது 42 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்தார். 

நியாய விலை கடைகளில் அனைத்துப் பொருட்களும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த  அமைச்சர் செல்லூர் ராஜூ , அப்படி வழங்கவில்லை என்று புகார் எழுந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending News