முகநூலில் அறிமுகமான திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்!

முகநூலில் அறிமுகமான திருநங்கையை, கடலூரை சேர்ந்த வாலிபர் காதலிதுத திருமணம் செய்துள்ளார்!

Last Updated : Aug 8, 2019, 10:47 AM IST
முகநூலில் அறிமுகமான திருநங்கையை திருமணம் செய்த வாலிபர்! title=

முகநூலில் அறிமுகமான திருநங்கையை, கடலூரை சேர்ந்த வாலிபர் காதலிதுத திருமணம் செய்துள்ளார்!

சமூக வலைத்தளத்தின் ஆதிக்கத்தால் பலர் பார்க்காமலும், கண்டம் விட்டு கண்டம் கடந்தும் காதலித்து, திருமணம் செய்து கொண்டது பற்றி நாம் அறிந்திருக்கிறோம். அதேபோல் தற்போது கடலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனக்கு முகநூலில் அறிமுகமாக திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரம் சாலைக்கரையை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி அமுதா. இவர்களுடைய மகள் அமிர்தா (வயது 22). திருநங்கையான இவருக்கு, முகநூல் மூலம் விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த லட்சுமணன்(27) என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.

மும்பையில் சினிமா படத்திற்கு ‘செட்’ அமைக்கும் பணியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த லட்சுமணன், திருநங்கை அமிர்தாவை காதலிப்பது பற்றி பெற்றோருக்கு தெரிவிக்க, அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று இருவருக்கும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடந்துமுடிந்தது. இவர்களது திருமணத்தை கோவிலுக்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

இதுகுறித்து அமிர்தா கூறுகையில், நான் பி.எஸ்சி. வரை படித்து விட்டு, கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்காக படித்து வருகிறேன். போலீஸ் வேலைக்கும் முயற்சி செய்து வருகிறேன். கடந்த 2 ஆண்டுகளாக மும்பையில் இருந்தேன். அப்போது முகநூல் மூலம் எனக்கும், லட்சுமணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகி வந்த நாங்கள், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.

கடந்த ஓராண்டாக இருவரும் காதலித்து வந்தோம். பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்து, நாங்கள் காதலிப்பது பற்றி பெற்றோரிடம் தெரிவித்தோம். இதற்கு அவர்கள் சம்மதம் தெரிவிக்க, எங்கள் திருமணத்தை முறைப்படி பதிவுசெய்து, திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடத்த முடிவுசெய்தோம் என தெரிவித்துள்ளார்.

Trending News