தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு போக்குவரத்து கழகம் விளம்பரம்!

தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சியில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jan 5, 2018, 10:35 AM IST
தினக்கூலி ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை: அரசு போக்குவரத்து கழகம் விளம்பரம்! title=

போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.போக்குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நேற்று மாலை தொடங்கிய இவ்வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும் பணிக்கு செல்பவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.இந்நிலையில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேவை என திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மலைக்கோட்டை, கண்டோன்மெண்ட், தீரன் நகர், புறநகர் கிளைகளை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நகர் மற்றும் புறநகர்களில் வெறும்4 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. திருச்சியிலிருந்து தொலைதூரத்துக்குச் செல்லும் பேருந்துகளில் ஒன்று கூட இயக்கப்படவில்லை.

 

 

Trending News