மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் - முன்விரோதத்தில் வெறிச்செயல்

சென்னை தாம்பரத்தில் முன் விரோதம் காரணமாக குடித்து விட்டு மதுபோதையில் போலீஸ்காரரின் மாமியார், மச்சான் உள்ளிட்டோரை கல்லால் அடித்து தாக்கிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 13, 2023, 05:42 PM IST
  • போலீஸ்காரர் குடும்பம் மீது தாக்குதல்
  • முன்விரோதம் காரணமாக வெறிச் செயல்
  • தலைமறைவானவர்களை தேடும் காவல்துறை
மதுபோதையில் போலீஸ் மாமியார், மச்சானை கல்லால் அடித்த வாலிபர்கள் - முன்விரோதத்தில் வெறிச்செயல் title=

தாம்பரத்தை அடுத்த கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தாம்பரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. தனது குழந்தையை பார்க்க அவ்வப்போது தாம்பரம் சிவராஜ் தெருவில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளார் இந்நிலையில் நேற்று தீபாவளி என்பதால் காவலர் தமிழரசன் வார விடுமுறை எடுத்துக்கொண்டு தனது மாமியார் வீட்டில் இருக்கும் தனது மனைவி மற்றும் குழந்தையை பார்ப்பதற்கு வந்துள்ளார்.

மேலும் படிக்க | பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!

அப்போது, மாமியார் வீட்டு வாசலில், அதே பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் பார்த்திபன் என்கின்ற இரண்டு பேர் பட்டாசு வெடித்து கொண்டும் ஆபாசமான வார்த்தைகளாலும் பேசி கொண்டும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாத காவலரின் சின்ன மாமியார் மஞ்சுளா அந்த இரு நபர்களை அழைத்து பேசி உள்ளார். பிறந்த குழந்தை வீட்டில் உள்ளது பட்டாசு வெடித்தால் குழந்தை அழுக ஆரம்பித்துவிடும், தயவுசெய்து இங்கே பட்டாசு வெடிக்காதீர்கள் என்று கூறி உள்ளார்.

அதனை கேட்காமல் மதுபோதையில் இருந்த அந்த இரண்டு நபர்கள் மஞ்சுளாவை ஆபாசமாக திட்டியும் கீழே இருந்த கற்களை எடுத்தும் சரமாரியாக தாக்கி மண்டையில் அடித்துள்ளனர். மஞ்சுளாவின் அலறல் சத்தத்தை கேட்ட அவரது மகன் ஹரிஹரன்  மற்றும் மாப்பிள்ளை தமிழரசன் இருவரும் தடுக்க முயற்சி செய்துள்ளனர். தடுக்க வந்த அவர்கள் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தி மண்டையை உடைத்துள்ளனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டார் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர்.

மேலும் ஏற்கனவே கடந்த புரட்டாசி மாதத்தன்று அப்பகுதியில் உள்ள பெருமாள் கோவில் திருவிழா நேரத்திலும் இதேபோல் குடித்து விட்டு மஞ்சுளாவின் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து உள்ளனர். அப்போதும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதை மனதில் வைத்து கொண்டு தான் தற்பொழுது இந்த தாக்குதல் நடந்து உள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தரப்பில் கூறி உள்ளனர். இது குறித்து தாம்பரம் காவல் நிலைய போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவலர் மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்கிய இரண்டு நபர்களையும் போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க | தீபாவளியால் தாறுமாறாக உயர்ந்த காற்று மாசு..! கும்மிடிப்பூண்டி,பெருங்குடி படு மோசம்....

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News