சென்னையில் இ-பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்!

இ-பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்படுவதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 18, 2021, 12:20 PM IST
சென்னையில் இ-பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்! title=

தமிழகத்தில் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. சென்னையில் ஊரடங்கு (Lockdown) அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது எனத் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் அத்தியாவசிய பணிகளுக்காக பயணம் செய்பவர்கள் இ -பதிவு (E-Registration) செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய  உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டஙகளுக்கள் மற்றும் மாவட்டங்களுக்கிடையும்  பயணம் செய்வதற்கு இப்பதிவு முறை நேற்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ALSO READ | மக்கள் கோரிக்கையை ஏற்று இ-பதிவில் மீண்டும் சேர்க்கப்பட்டது திருமண பிரிவு

இ-பதிவு முறை https://eregistet.tnega.org  என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த இணையதள முகவரியில் பதிவு செய்துவிட்டு முக்கிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டத்திற்கு வெளியேயும், மாவட்டத்திற்கு உள்ளேயேயும் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து சென்னையில் பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இ பதிவு இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்படுகிறது இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News