இப்படி ஏறினா எப்படி வாங்குறது? அதிகரித்த தங்கம் விலையால் அவதியில் மக்கள்

Gold Rate Today: சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 11:06 AM IST
  • மக்களுக்கு ஷாக் கொடுத்த தங்கம்.
  • ஒரே நாளில் பெரிய மாற்றம்.
  • தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன.
இப்படி ஏறினா எப்படி வாங்குறது? அதிகரித்த தங்கம் விலையால் அவதியில் மக்கள் title=

கொரோனா தொற்று நமது வாழ்வின் பலவித அம்சங்களையும் மாற்றியுள்ளது. எனினும், பெரும் மாற்றம் ஏற்படாத ஒரு சில விஷயங்களில் தங்க முதலீடும் ஒன்றாகும். உலகளவில் பொருளாதாரத்தில் நிலவி வரும் ஸ்திரமற்ற தன்மையால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், பாண்டுகள் என இருந்த தங்கள் முதலீடுகளை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகின்றனர். 

எனினும், உலகளாவிய ஸ்திரமற்ற தன்மை, சந்தையில் உள்ள ஏற்ற இறக்கங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சில நேரம் ஏற்றத்தையும் சில நேரம் வீழ்ச்சியையும் கண்டு வருகின்றது.

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை வணிகத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,877-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம், ரூ. 216 அதிகரித்து 39,016-ல் விற்பனையில் உள்ளது. 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5,276 ஆகவும் ஒரு சவரன் ரூ. 42,208 ஆகவும் விற்பனையாகிறது. 

மேலும் படிக்க | இந்த 4 வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்யுங்கள்

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 66.80 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 66,800 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. 

இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.

தேசிய அளவில் தங்கத்தின் விலை பற்றி பல ஊகங்கள் உள்ளன. எனினும், உலகெங்கிலும் உள்ள பல பொருளாதார நிபுணர்கள், தங்கத்தின் மீது நேர்மறையான அணுகுமுறையையே கொண்டுள்ளனர். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் தங்கம் ஒரு அவுன்ஸ் 3,000-5,000 டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோரது ஆர்வத்தை இது அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க |  ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 சரிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News