சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனம்!

இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களின் Mutual Funds திட்டங்கள், BSE மற்றும் NSE Stocks, Corporate Fixed Deposits, மற்றும் Insurance Plans உட்பட விரிவான நிதி திட்டங்களை வழங்கும் இந்தியாவின் முன்னணி ஆன்லைன் முதலீட்டு தளம் FundsIndia ஆகும்.  

Written by - RK Spark | Last Updated : Sep 29, 2024, 10:43 AM IST
  • சென்னையில் FundsIndia நிறுவனத்தின் கிளை.
  • பல முதலீடு திட்டங்களை தங்கள் வசம் வைத்துள்ளது.
  • பெரிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனம்! title=

இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் வெல்த் மேனேஜ்மென்ட் பிளாட்ஃபார்ம்களில் ஒன்றான FundsIndia, ஒரு பெரிய, அதிநவீன ஸ்டேட் ஆப் தி ஆர்ட் அலுவலக வளாகத்திற்கு இடம் பெயர்வதன் மூலம், உற்சாகமான வளர்ச்சிக்கான ஒரு புதிய  கட்டத்தில் காலடி எடுத்துவைக்கிறது. இந்த நிறுவத்தின் பெரும்பகுதி பங்குகளையும் வெஸ்ட்பிரிட்ஜ் கேபிட்டல் பெற்றுள்ள இந்த முக்கிய தருணத்தில், ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சியின் பின்னணியில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை FundsIndiaவின் யுக்திபூர்வமான முன்னேற்றப் பாதை மற்றும் செயல்திறனை உறுதி செய்து, ஏற்பிசைவு வழங்குவதை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் படிக்க | சென்னை : லோக்கல் ரயில்வே ஸ்டேஷனில் குட்டி ஷாப்பிங் மால், மல்டி லெவல் கார் பார்க்கிங் வசதி விரைவில்

 

"Making India Wealthier" என்ற தனது குறிக்கோளை கொண்ட FundsIndia, 15+ வருடங்களாக உலகத் தரம் வாய்ந்த முதலீட்டு திட்டங்களை வழங்கி, 15500 கோடிக்கும் அதிகமான AUMகளை நிர்வகித்து வருகிறது. அதன் பயணத்தில் இந்த இடம்பெயர்வு, முக்கியமான தருணத்தை ஒரு முக்கிய மைல்கல்லாகக் குறிப்பிடுகிறது. ஒரு பரந்த விசாலமான, நவீன அலுவலகத்திற்கு செல்லும் இந்த இடமாற்ற நடவடிக்கை, நிறுவனத்தின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் தனது பணியாளர்களுக்கான செயல்வல்லமை மிக்க பணிச்சூழலை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

"இந்த புதிய அலுவலகத்திற்கு எங்களின் இடப்பெயர்வு முகவரி மாற்றத்தை மட்டுமே குறிப்பதல்ல, அதற்கும் மேலான ஒன்று" என்று FundsIndia CEO திரு கிரிராஜன் முருகன் கூறினார். மேலும்," ஒரு நிறுவனமாக எங்களின் பரிணாம வளர்ச்சியையும், எங்கள் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் மேம்பட்ட மதிப்பை வழங்குவதற்கான எங்கள் எதிர்பார்ப்புக்களையும் குறிப்பாக அடையயாளப்படுத்துகிறது. நாங்கள் எங்கள் சேவைகளை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், டிஜிட்டல் காலத்திற்கு ஏற்ப வெல்த் மேனேஜ்மெண்ட்  மேலாண்மை செயல்பாடுகளை மறுவரையறுக்கவும் தயாராக உள்ளோம்.

நிறுவனம் மேலாண்மை செய்யும் சொத்துக்களின் மதிப்பு (AUM) தொடர்பாக 15,500 கோடிகள் என்ற மிகப் பெரிய சாதனையை புரிந்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணத்தினால்தான் இந்த மைல்கல்லை அடைந்து சாதனை புரிய முடிந்தது. இந்த வெற்றிப் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்தவர்களுக்கும், வாய்ப்புகள் நிறைந்த ஒரு நம்பிக்கையளிக்கும் எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு உதவிவரும் ஒவ்வொருவருக்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கிரிராஜன் முருகன் கூறினார்.

 
வளம் மிக்க பணியாளர்களுக்கான ஒரு பல்திறன் பணியிடம் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம், புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை பேணி வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன உள்கட்டமைப்பு, திறந்தவெளிகள் மற்றும் சந்திப்புக்களுக்கான உயிர்த்துடிப்புடன் கூடிய பகுதிகளைக் கொண்ட இந்த பணியிடம், FundsIndiaவின் வளர்ந்து வரும் பணியாளர் குழுவுக்கு ஆதரவளிப்பதையும், இந்தத் தொழில்துறையில் தலை சிறந்த திறமையாளர்களை ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்திவரும் இந்த தருணத்தில், இத்தகைய ​​மேம்படுத்தப்பட்ட பணிச்சூழல், புத்தாக்கங்களை உருவாக்கவும், சிறந்த சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் பணியாளர்களுக்கு பெருமளவில் உதவுகிறது.

பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகமளிக்கும் ஒரு நீண்ட எதிர்காலம் 
 
நிறுவனம் புதிய முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள அதன் சேவையின் செயல்திறன்களை விரிவுபடுத்தவும், வளர்ந்து வரும் அதன் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் அதன் டிஜிட்டல் தளத்தை மேம்படுத்தவும் துரிதமாகத் தயாராகி வருகிறது. "எதிர்வரும் நாட்கள் இன்னும் கூடுதல் உற்சாகமளிப்பதாக இருக்கும்" என்று கிரிராஜன் முருகன் தெரிவித்தார். "எங்கள் திட்டங்கள் பிரம்மாண்டமானவை, மற்றும் எங்கள் பணியாளர்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் அதே சந்தர்ப்பத்தில், எங்கள் முதலீட்டாளர்களுக்கு மேலும் அதிகளவிலான மதிப்பை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம்." FundsIndia தனது புதிய பயணத்தை தொடங்கவிருக்கும் இந்த வேளையில், ஒவ்வொரு இந்தியனும் எதிர்காலத்திற்கான முதலீடுகளை நம்பிக்கையுடனும் எளிதாக்கவும் மேற்கொள்ள உதவும் வகையில் இந்தியாவில் வெல்த் மேனேஜ்மெண்ட் நடைமுறைகள் மக்கள் மயமாக்கப்படுவதற்கான தனது குறிக்கோளில் தொடர்ந்து நிலையான கவனத்தை செலுத்திவருகிறது. 

மேலும் படிக்க | 'லட்டு பாவங்கள்' தலைப்பில் வீடியோ: யூ-டியூப் சேனல் மீது புகார்!

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News