மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!!

வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Last Updated : Oct 29, 2018, 10:27 AM IST
மீன்பிடிக்க செல்ல வேண்டாம்! மீனவர்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!! title=

வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்று மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாற வாய்ப்பு உள்ளதால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வடக்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதால் இன்று கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம். 

அடுத்த 2 முதல் 3 நாட்களுக்கு அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மிதமான பனிமூட்டம் நிலவும். ஒடிசாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது

Trending News